December 6, 2025, 5:11 PM
29.4 C
Chennai

வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் அடித்த அதிர்ஷ்டம்!

Treasure
Treasure

பிரான்ஸை சேர்ந்த தம்பதியருக்கு வீட்டை புதுப்பிக்கும் போது புதையல் ஒன்று கிடைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு பிரித்தானியாவில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வரும் தம்பதியினர் தங்கள் வீட்டை புதுப்பிக்கும் போது செங்கல்களுக்கு நடுவே உலோக பெட்டி ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.

மேலும் அந்தப் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் தங்க நாணயங்கள் இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளனர்.

இதையடுத்து சில தினங்களுக்கு பிறகு அந்த வீட்டில் ஒரு இடத்தில் சில தங்க நாணயங்கள் பை ஒன்றிலிருந்தும் கிடைத்துள்ளது. அதோடு சேர்த்து மொத்தமாக 239 தங்க நாணயங்கள் அந்த வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு ஏலம் விடப்பட்ட அந்த தங்க நாணயங்கள் 250,000 யூரோக்கள் முதல் 300,000 யூரோக்கள் வரை ஏலம் போகும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அந்த நாணயங்களை ஏலத்திற்கு கேட்டவர்கள் அதன் விலையை தாறுமாறாக உயர்த்த அவை ஒரு மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாக விலை போனதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பணியாட்களும், வீட்டின் உரிமையாளர்களும் அந்த தொகையை பங்கிட்டு கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
ஆனால் புதையல் அனைத்தும் பிரான்ஸ் சட்டப்படி அரசுக்கு சொந்தமாக கருதப்படுகிறது.

இருப்பினும் புதையல் கண்டெடுக்கப்பட்ட அந்த நிலமானது 2016-க்கு முன்பு வாங்கப்பட்டதால் இந்த சட்டம் பொருந்தாது என்று கூறப்படுகிறது.

எனவே இந்த வீட்டை உரிமையாளர்கள் 2012-ல் வாங்கி விட்டதால் அதில் கிடைத்த புதையலும் அவர்களுக்கே சொந்தமானது. மேலும் வீட்டை புதுப்பிக்க முற்பட்ட அந்த தம்பதிக்கு புது வீடே வாங்கும் அளவிற்கு அதிர்ஷ்டம் அடித்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories