காந்திஜியின் தத்துவங்களால் உலகமே இந்தியாவை நோக்குகிறது: பகத்சிங் கோஷ்யாரி!

bhagatsinghkoshyari - 2026

செய்தி தொகுப்பு: ஜெயஸ்ரீ எம்.சாரி

“மகாத்மா காந்தியின் தத்துவங்களும், கொள்கைகளும் இன்றும் உலக மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதாக உள்ளதால் உலக நாடுகளின் கவனம் இந்தியா பக்கம் ஈர்க்கப்பட்டு வருகிறது.

காந்தியடிகள் தன்னுடைய வாழ்வில் பின்பற்றிய பல விஷயங்களில் ஒன்றான ‘மக்களுக்கு சுதந்திரம்’ என்பதானது தற்போது உலக நாடுகளுக்கும் உபயோகமாய் உள்ளது.

தன்னம்பிக்கை, தெளிவான சிந்தனை, நற்குணம் முதலியவற்றை தன்னுடைய வாழ்வில் மூலம் வழிகாட்டி கொண்டிருந்த காந்தியடிகளின் கோட்பாடுகளின் மூலம் இயங்கும் நம் பாரதத்தை, உலக நாடுகள் ஒரு நம்பிக்கையுடன் நோக்குகின்றன” என்று மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநரான பகத்சிங் கோஷ்யாரி கூறினார்.

கோஷ்யாரி மஹாராஷ்டிர மாநிலத்தில் வர்தாவில் உள்ள மகாத்மா காந்தி அகில உலக ஹிந்தி பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி காந்தியின் தத்துவம் என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய அளவிலான கருத்தரங்கில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.

bhagatsinghkoshyari2 - 2026
ஆளுநருக்கு நினைவுப் பரிசு வழங்கி வரவேற்கும் துணைவேந்தர்.

திரைப்பட நடிகர் நிதிஷ் பரத்வாஜ் ,”நமது நாட்டின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் விதமாக ஹிந்தி பல்கலைக்கழகம் ஆரோக்கிய தீபோத்ஸவத்தை ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார்.

bhagatsinghkoshyari4 1 - 2026

புரொபஸர் ஸ்ரீநிவாஸ் வர்கேடி, தன் உரையில் “மனித நேயத்தையும் சத்தியத்தையும் போற்றுபவராக இருந்தார் மகாத்மா காந்தியடிகள்,” என்றார். புரொபஸர் ரஜனீஷ் குமார் ஷுக்ல, பல்கலைக்கழக துணைவேந்தர், நிகழ்ச்சியில் தலைமை தாங்கிப் பேசினார்.

முன்னதாக துணைவேந்தர் ஆளுநருக்கு நினைவுச்சின்னம், ராட்டை, சால்வை, பருத்தி நூலினாலான மாலை வழங்கி வரவேற்றார்.

டாக்டர். ஜெயந்த் உபாத்யாய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், பல்கலைக்கழக பதிவாளர் காதர் நவாஸ் கான் நன்றியுரை தெரிவித்தார்.

பின்னர், மாலையில் காந்தியடிகளின் 152 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆரோக்கிய தீபோத்ஸவம் நிகழ்ச்சிய மேதகு ஆளுநர் பல்கலைக்கழகத்தில் உள்ள காந்தி ஹில்ஸ் என்ற இடத்திலிருந்து தொடங்கி வைத்தார்.

இந்த வருடமும் வர்தா நகரின் பல முக்கிய இடங்களில், வீதிகளில், வீடுகளில் மக்கள் தீபங்கள் ஏற்றி ஆரோக்கிய தீபோத்ஸவத்தை கொண்டாடி காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

bhagatsinghkoshyari1 - 2026
மஹாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஆரோக்கிய தீபோத்ஸவத்தை வர்தா ஹிந்தி பல்கலைக்கழகத்தில் தொடங்கி வைக்கும் போது

டாக்டர் ராம்தாஸ் அம்பேத்கர்,சட்ட மேலவை உறுப்பினர், சரிகா காகரே, வர்தா ஜில்லா பரிஷத்தின் தலைவர், நந்தா உகடே,
உம்ரி பஞ்சாயத்தின் முதல் குடிமகள், புரொஃபஸர் ஹனுமான் பிரசாத் ஷுக்லா, பல்கலைக்கழகத்தின் சார்பு துணை வேந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிகளுக்கு முன்பாக ஆளுநர் சேவாகிராம் என்னும் இடத்தில் உள்ள பாபுகுடி என்று அழைக்கப்படும் காந்தியின் ஆஸிரமத்திற்கு விஜயம் செய்து காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.

ராம்தாஸ் தடஸ், மக்களவை உறுப்பினர், வர்தா, TRN பிரபு, ஆஸிரமத்தின் தலைவர், ப்ராஜக்தா லாவங்கரே- வெர்மா, டிவிஷனல் கமிஷனர், நாக்பூர், ப்ரேர்ணா தேஷ்ப்ராதார், ஆட்சியாளர், வர்தா ஆகியோர் ஆளுநரை வரவேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories