காந்திஜியின் தத்துவங்களால் உலகமே இந்தியாவை நோக்குகிறது: பகத்சிங் கோஷ்யாரி!

bhagatsinghkoshyari - 2026

செய்தி தொகுப்பு: ஜெயஸ்ரீ எம்.சாரி

“மகாத்மா காந்தியின் தத்துவங்களும், கொள்கைகளும் இன்றும் உலக மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதாக உள்ளதால் உலக நாடுகளின் கவனம் இந்தியா பக்கம் ஈர்க்கப்பட்டு வருகிறது.

காந்தியடிகள் தன்னுடைய வாழ்வில் பின்பற்றிய பல விஷயங்களில் ஒன்றான ‘மக்களுக்கு சுதந்திரம்’ என்பதானது தற்போது உலக நாடுகளுக்கும் உபயோகமாய் உள்ளது.

தன்னம்பிக்கை, தெளிவான சிந்தனை, நற்குணம் முதலியவற்றை தன்னுடைய வாழ்வில் மூலம் வழிகாட்டி கொண்டிருந்த காந்தியடிகளின் கோட்பாடுகளின் மூலம் இயங்கும் நம் பாரதத்தை, உலக நாடுகள் ஒரு நம்பிக்கையுடன் நோக்குகின்றன” என்று மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநரான பகத்சிங் கோஷ்யாரி கூறினார்.

கோஷ்யாரி மஹாராஷ்டிர மாநிலத்தில் வர்தாவில் உள்ள மகாத்மா காந்தி அகில உலக ஹிந்தி பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி காந்தியின் தத்துவம் என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய அளவிலான கருத்தரங்கில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.

bhagatsinghkoshyari2 - 2026
ஆளுநருக்கு நினைவுப் பரிசு வழங்கி வரவேற்கும் துணைவேந்தர்.

திரைப்பட நடிகர் நிதிஷ் பரத்வாஜ் ,”நமது நாட்டின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் விதமாக ஹிந்தி பல்கலைக்கழகம் ஆரோக்கிய தீபோத்ஸவத்தை ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார்.

bhagatsinghkoshyari4 1 - 2026

புரொபஸர் ஸ்ரீநிவாஸ் வர்கேடி, தன் உரையில் “மனித நேயத்தையும் சத்தியத்தையும் போற்றுபவராக இருந்தார் மகாத்மா காந்தியடிகள்,” என்றார். புரொபஸர் ரஜனீஷ் குமார் ஷுக்ல, பல்கலைக்கழக துணைவேந்தர், நிகழ்ச்சியில் தலைமை தாங்கிப் பேசினார்.

முன்னதாக துணைவேந்தர் ஆளுநருக்கு நினைவுச்சின்னம், ராட்டை, சால்வை, பருத்தி நூலினாலான மாலை வழங்கி வரவேற்றார்.

டாக்டர். ஜெயந்த் உபாத்யாய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், பல்கலைக்கழக பதிவாளர் காதர் நவாஸ் கான் நன்றியுரை தெரிவித்தார்.

பின்னர், மாலையில் காந்தியடிகளின் 152 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆரோக்கிய தீபோத்ஸவம் நிகழ்ச்சிய மேதகு ஆளுநர் பல்கலைக்கழகத்தில் உள்ள காந்தி ஹில்ஸ் என்ற இடத்திலிருந்து தொடங்கி வைத்தார்.

இந்த வருடமும் வர்தா நகரின் பல முக்கிய இடங்களில், வீதிகளில், வீடுகளில் மக்கள் தீபங்கள் ஏற்றி ஆரோக்கிய தீபோத்ஸவத்தை கொண்டாடி காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

bhagatsinghkoshyari1 - 2026
மஹாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஆரோக்கிய தீபோத்ஸவத்தை வர்தா ஹிந்தி பல்கலைக்கழகத்தில் தொடங்கி வைக்கும் போது

டாக்டர் ராம்தாஸ் அம்பேத்கர்,சட்ட மேலவை உறுப்பினர், சரிகா காகரே, வர்தா ஜில்லா பரிஷத்தின் தலைவர், நந்தா உகடே,
உம்ரி பஞ்சாயத்தின் முதல் குடிமகள், புரொஃபஸர் ஹனுமான் பிரசாத் ஷுக்லா, பல்கலைக்கழகத்தின் சார்பு துணை வேந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிகளுக்கு முன்பாக ஆளுநர் சேவாகிராம் என்னும் இடத்தில் உள்ள பாபுகுடி என்று அழைக்கப்படும் காந்தியின் ஆஸிரமத்திற்கு விஜயம் செய்து காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.

ராம்தாஸ் தடஸ், மக்களவை உறுப்பினர், வர்தா, TRN பிரபு, ஆஸிரமத்தின் தலைவர், ப்ராஜக்தா லாவங்கரே- வெர்மா, டிவிஷனல் கமிஷனர், நாக்பூர், ப்ரேர்ணா தேஷ்ப்ராதார், ஆட்சியாளர், வர்தா ஆகியோர் ஆளுநரை வரவேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

Topics

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

Entertainment News

Popular Categories