December 5, 2025, 7:49 PM
26.7 C
Chennai

அரக்கர்களின் ‘ஒன்றாத அரசு’ ஆட்சியில்… கோயிலுக்குள் மட்டுமே கொரோனா பரவுகிறது! அடடே!

nellaiappar temple
nellaiappar temple

நாங்கள் பிள்ளையார் சதுர்த்தி சமயத்தில் கும்பகோணம் போயிருந்தோம்.

புதன் இரவு, எக்மோர் ஸ்டேஷனில் எள்ளு போட்டால் எள்ளு விழாத கூட்டம்.. ரயில் நிரம்பி வழிந்தது. ஒரு காலி இடம் கூட தென்பட வில்லை… பாதிப்பேர் முகத்தில் மாஸ்க் இல்லை.. கொரோனா வரவும் வாய்ப்பில்லை..

அதே நாள் பஸ்ஸில் பயணித்த என் உறவுக்காரர் சொன்னார் இதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையம் மனித வெள்ளமாக இருந்தது என்று.. கொரோனா வர வாய்ப்பில்லைதான்..

மறுநாள் வியாழனன்று ஒரு வேலையாக சப்ரெஜிஸ்டிரார் அலுவலகம் போனோம். பணம் கொழிக்கும் இடமல்லவா. வெள்ளை வேட்டிகளும், சட்டைகளுமாக அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. கூட்டமோ கூட்டம்.. உட்கார இடமில்லை. கொரோனா வர வாய்ப்பே இல்லை..

பிள்ளையார் சதுர்த்தியன்று கோவில்களுக்குள் போகாமல் வெளியே கேட்டிலிருந்து கூட்டமாக நின்று பிள்ளையாரை தரிசனம் செய்தோம். கோவிலுக்குள் போனால் கொரோனா வர வாய்ப்பு உள்ளதே..

சனியன்று நவராத்திரிக்குப் பொம்மை வாங்கலாம் என்று கும்பேஸ்வரன் கோவில் கடைவீதி போனோம். அனைத்து கடைகளும் ஜகஜ்ஜோதியாக இருந்தது. விழாக் கால வியாபாரம் சூடு பிடித்திருந்தது. எல்லாக் கடைகளிலும் நல்ல கூட்டம்..
கொரோனா வர வாய்ப்பு நிச்சயம் இல்லைதான்..

பொம்மைகளை வாங்கிக் கொண்டு கோவில் உள்ளே சென்று பார்க்கலாமே என்று உள்ளே போனோம்.

அடடா.. அனுமதி இல்லை..

crowd everywhere but not in temples
crowd everywhere but not in temples

கோவிலுக்குள் போனால் கொரோனா வர வாய்ப்பு உள்ளதே.. நம் போலீஸ் ஒழுங்காக செய்யும் வேலை இது மட்டும்தான் என்று நினைக்கிறேன்..

சென்னை டவுன் பஸ்களை மதிய நேரத்தில் கூட பாருங்கள்.. நிரம்பி வழிகிறது..கொரோனா வர வாய்ப்பு நிச்சயம் இல்லை..

புரட்டாசி சனிக் கிழமைகளில் ஒரு பெருமாளைக் கூட பார்க்க வில்லையே என்ற என் குறையை ஆந்திர மாநிலம் தீர்த்து வைத்தது.. நேற்று சித்தூர் மாவட்டத்திலுள்ள சுரட்டப் பள்ளி மற்றும் நாகலாபுரம் கோவில்களுக்குப் போனோம்.

ஓரளவு கூட்டம் இருந்தாலும் மக்கள் பொறுப்பாக தள்ளித் தள்ளி நின்று பொறுமையாக தரிசனம் செய்தனர்.. மாஸ்க் இல்லாமல் உள்ளே போக போலீசார் விட வில்லை. க்யூ அருகே இரு போலீசார் நின்று கூட்டத்தை தள்ளித் தள்ளி நிற்க அறிவுறுத்திக் கொண்டே இருந்தனர்.

நிம்மதியாக சுவாமி தரிசனம் செய்து விட்டு வந்தோம்..

ஆக, தமிழக கோவில்களில் மட்டும்தான் வார இறுதிகளில் கோவில்களுக்கு வெளியே பக்தர்களைப் பிடிக்கக் கொரோனா கிருமிகள் காத்துக் கொண்டு இருக்கின்றன என்பது நம் அரசுக்கு நன்றாகப் புரிந்த மாதிரியே எனக்கும் புரிந்தது..

நம் ஊர் போலீஸும் பக்தர்களை கோவில் உள்ளே விடாமல் தடுப்பதற்கு பதிலாக கட்டுப் பாடாக, வரிசையாக, தகுந்த சமூக இடைவெளியுடன் உள்ளே போக அனுமதிக்கலாமே..

ஆனால், அதற்குண்டான மனம் வேண்டும்.. இங்கே கொரோனா பெயரை உபயோகப் படுத்தி கோவில்களை முடிவது மட்டும்தான் லட்சியமாக இருப்பதால் அது சாத்தியம் இல்லை..

கடவுள்தான் எல்லாருக்கும் நல்ல புத்தியைத் தரவேண்டும்..

-உமா வெங்கட்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories