பிரதமர் மோடியை மனைவியுடன் சென்று நடிகர் ரஜினிகாந்த் சென்று சந்தித்துள்ளார்
திரையுலகில் மிகவும் உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. இந்த விருது சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. தில்லியில் நடைபெற்ற விழாவில் அவர் விருதை பெற்றுக் கொண்டார்.
சமூக வலை தளங்களிலும் தாதா சாகேப் ரஜினிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் விருது பெற்ற ரஜினிகாந்த் அதன் பின்னர் தில்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மனைவியுடன் சென்று சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளார்.
பிரதமர் மோடியையும் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார். இந்த 2 சந்திப்புகளின் போதும் அவரது மனைவியும் உடன் இருந்திருக்கிறார். இது தொடர்பான போட்டோக்களை ரஜினிகாந்த் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
அதில் அவர் கூறி உள்ளதாவது: மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும் , பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி என்று கூறி உள்ளார். போட்டோக்களையும், சந்திப்பையும் அறிந்த ரஜினி ரசிகர்கள் படு குஷியில் இருக்கின்றனர்.
மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும் ,பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி. pic.twitter.com/0pFheNjnFd
— Rajinikanth (@rajinikanth) October 27, 2021