December 6, 2025, 8:36 AM
23.8 C
Chennai

புவியைத் தாக்கும் புவிகாந்தபுயல்: நாசா எச்சரிக்கை!

Geomagnetic storm
Geomagnetic storm

இன்று உலகில் மிகப்பெரிய புவி காந்த புயல் ஏற்பட இருப்பதாக அமெரிக்காவின் கடலியல் மற்றும் வளி மண்டல நிறுவனத்தி விண்வெளி வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
கடந்த வியாழன் அன்று சூரியனிலிருந்து அதிக ஈர்ப்பு திறன் கொண்ட சக்தி வாய்ந்த பிளாஸ்மா மேகங்கள் வெளியாகின.

இதன் தொடர்ச்சியாக பூமியை புவி காந்த புயல் தாக்க இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்து இருக்கிறார்கள்.

இன்று (அக்டோபர் 30) பூமியை சக்தி வாய்ந்த புவி காந்த புயல் தாக்கும் என்றும், நாளை (அக்டோபர் 31) மிதமான புவி காந்த புயல் பூமியை தாக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வியாழன் அன்று சூரியனிலிருந்து வெளியான CME எனப்படும் ப்ளாஸ்மாவை சூரியவியல் ஆய்வு நிறுவனம் படம் எடுத்து வெளியிட்டு இருக்கிறது. வியாழன் அன்று வெளியான கதிர்கள் X1 பிரிவு என வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

X இல் தொடங்கி X1, X2 என X10 வரை சூரியனிலிருந்து வெளியாகும் CME வகைப்படுத்தப்படுகிறது. இதில் X10 வகை மிகவும் அடர்த்தியானது என்றும் அதிக பாதிப்பை தரக்கூடியது எனவும் நாசா தெரிவிக்கிறது.

பூமியின் நேர்கோட்டில் சூரியனில் sunspot AR2887 என்ற இடத்தில் ஏற்பட்ட ராட்சத வெடிப்பே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சூரியனை சுற்றியுள்ள வளிமண்டலத்தில் ஏற்படும் இந்த CME சூரியனிலிருந்து வினாடிக்கு 1,260 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வெளியேறி பூமிக்கு அருகே செல்லும்.

இதனால் பூமியின் இயல்பான புவி ஈர்ப்பு திறன் பாதிக்கப்படும். சூரியனில் ஏற்பட்ட வெடிப்பால் ஒரு லட்சம் கிலோ மீட்டர் உயரம் கொண்ட ராட்சத பிளாஸ்மா சூரியனிலிருந்து வினாடிக்கு 700 கிலோ மீட்டர் வேகத்தில் வெளியேறி உள்ளது.

இதனால் இன்று ஏற்பட இருக்கும் புவி காந்த புயல், பூமியின் காந்த மண்டலத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என நாசா எச்சரித்து உள்ளது.

சூரியனிலிருந்து வெளியான பிளாஸ்மா பூமியை தாக்கும்பட்சத்தில் மின் விநியோகம், தவறான எச்சரிக்கை ஒலிகள், செயற்கைக் கொள்களில் தொழில்நுட்பக் கோளாறுகள், தொலைதொடர்பு பிரச்சனைகள், மொபைல், ரேடியோ சிக்னல் குறைபாடுகள், எலெக்டிரானிக் கருவிகள் செயலிழப்பு, காந்தத்தை கொண்ட இயங்கும் கருவிகள் செயலிழக்க பெரும் அளவில் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது

இந்த புவி காந்த புயலின் அரோராக்கள் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இருந்து லோவா மற்றும் ஓரேகான் வரை வான்வெளியில் தென்படும் என அமெரிக்காவின் கடலியல் மற்றும் வளி மண்டல நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories