December 5, 2025, 9:16 PM
26.6 C
Chennai

மத பாகுபாடு காட்டும் கிறிஸ்துவப் பள்ளிக்கு அரசு நிதிஉதவி ஏன்?

tenkasi collector office hindumunnani petition
tenkasi collector office hindumunnani petition

மத பாகுபாடு காட்டி இந்து மத சின்னங்களை மட்டும் அவமரியாதை செய்யும் அரசு உதவி பெறும் கிறிஸ்துவ பள்ளிக்கு அரசு உதவிகளை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

தென்காசி மாவட்டம், பங்களா சுரண்டையில் பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி கிருத்துவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி. இந்த பள்ளியில் 12 ம் வகுப்பு பயிலும் கலைவாணி என்ற மாணவி எப்போதும் நெற்றியில் திருநீறு மற்றும் குங்கும்ப்பொட்டு வைத்து பள்ளிக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அந்த மாணவி வழக்கம் போல் நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமப் பொட்டு வைத்து பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர்கள் 2 பேரும், மேலும் 2 ஆசிரியர்களும் சேர்ந்து நெற்றியில் உள்ள இந்து அடையாளங்களை அழித்துவிட்டு பள்ளிக்கு வர வேண்டும் என்றும், உடனே அவற்றை அழிக்கும்படியும் வற்புறுத்தியும் மிரட்டியும் உள்ளனர். அந்த மாணவி அவ்வாறு அழிக்காததால் உடன் இருக்கும் மாணவியை வைத்து அழித்துள்ளனர்.

tenkasi district education office
tenkasi district education office

இந்தச் செயலால் பெருத்த அவமானமும் அவமரியாதையும் அடைந்த அந்த மாணவி, தனது பெற்றோர் மற்றும் ஊரார்களிடம் புகார் கூறியுள்ளார். இதை அடுத்து இந்து முன்னணி அமைப்பினரிடம் ஊரார் உதவி கோரினர். இதை அடுத்து, இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.

இந்து முன்னணி அமைப்பின் தென்காசி மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, ஆலங்குளம் ஒன்றிய பாஜக., பொறுப்பாளர் கந்தசாமி மற்றும் ஊர்ப் பொதுமக்கள் பலர் மனு கொடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சம்பளம் அரசின் மூலமாக கொடுக்கப்படுகிறது. பெரும்பான்மை இந்துக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசுப்பள்ளியில் கிறிஸ்தவ மதத் திணிப்பு ஒருபுறம் நடக்கிறது என்றால், மறுபுறம் ஹிந்து மத அடையாளங்களை அவமரியாதை செய்து, மாணவ மாணவிகளை மத ரீதியாக துன்பப் படுத்துவதும் நடக்கிறது. எவர் அளிக்கும் பணத்தில் தினந்தோறும் சோறு உண்கிறார்களோ அவர்களுக்கு துரோகம் செய்யும் வகையில் ஆசிரியர்கள் ஈடுபடுவது அவர்கள் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் சாத்தானின் செயலைப் போன்றது என்றும், ஆசிரியர்கள் சாத்தானின் அடிமைகளாக மாறுவது அவர்கள் சார்ந்திருக்கும் கிறிஸ்துவ மதத்துக்கே செய்யும் துரோகம் என்றும் அவர்கள் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories