April 21, 2025, 2:07 PM
34.7 C
Chennai

மத பாகுபாடு காட்டும் கிறிஸ்துவப் பள்ளிக்கு அரசு நிதிஉதவி ஏன்?

tenkasi collector office hindumunnani petition
tenkasi collector office hindumunnani petition

மத பாகுபாடு காட்டி இந்து மத சின்னங்களை மட்டும் அவமரியாதை செய்யும் அரசு உதவி பெறும் கிறிஸ்துவ பள்ளிக்கு அரசு உதவிகளை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

தென்காசி மாவட்டம், பங்களா சுரண்டையில் பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி கிருத்துவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி. இந்த பள்ளியில் 12 ம் வகுப்பு பயிலும் கலைவாணி என்ற மாணவி எப்போதும் நெற்றியில் திருநீறு மற்றும் குங்கும்ப்பொட்டு வைத்து பள்ளிக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அந்த மாணவி வழக்கம் போல் நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமப் பொட்டு வைத்து பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர்கள் 2 பேரும், மேலும் 2 ஆசிரியர்களும் சேர்ந்து நெற்றியில் உள்ள இந்து அடையாளங்களை அழித்துவிட்டு பள்ளிக்கு வர வேண்டும் என்றும், உடனே அவற்றை அழிக்கும்படியும் வற்புறுத்தியும் மிரட்டியும் உள்ளனர். அந்த மாணவி அவ்வாறு அழிக்காததால் உடன் இருக்கும் மாணவியை வைத்து அழித்துள்ளனர்.

ALSO READ:  புதிய பாம்பன் பாலம் ஏப்.6ல் திறப்பு; வருகிறார் பிரதமர் மோடி!
tenkasi district education office
tenkasi district education office

இந்தச் செயலால் பெருத்த அவமானமும் அவமரியாதையும் அடைந்த அந்த மாணவி, தனது பெற்றோர் மற்றும் ஊரார்களிடம் புகார் கூறியுள்ளார். இதை அடுத்து இந்து முன்னணி அமைப்பினரிடம் ஊரார் உதவி கோரினர். இதை அடுத்து, இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.

இந்து முன்னணி அமைப்பின் தென்காசி மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, ஆலங்குளம் ஒன்றிய பாஜக., பொறுப்பாளர் கந்தசாமி மற்றும் ஊர்ப் பொதுமக்கள் பலர் மனு கொடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சம்பளம் அரசின் மூலமாக கொடுக்கப்படுகிறது. பெரும்பான்மை இந்துக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசுப்பள்ளியில் கிறிஸ்தவ மதத் திணிப்பு ஒருபுறம் நடக்கிறது என்றால், மறுபுறம் ஹிந்து மத அடையாளங்களை அவமரியாதை செய்து, மாணவ மாணவிகளை மத ரீதியாக துன்பப் படுத்துவதும் நடக்கிறது. எவர் அளிக்கும் பணத்தில் தினந்தோறும் சோறு உண்கிறார்களோ அவர்களுக்கு துரோகம் செய்யும் வகையில் ஆசிரியர்கள் ஈடுபடுவது அவர்கள் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் சாத்தானின் செயலைப் போன்றது என்றும், ஆசிரியர்கள் சாத்தானின் அடிமைகளாக மாறுவது அவர்கள் சார்ந்திருக்கும் கிறிஸ்துவ மதத்துக்கே செய்யும் துரோகம் என்றும் அவர்கள் கூறினர்.

ALSO READ:  அப்பாவிகளைக் கைது செய்ய பேஸ்புக்கை மேய்ந்து கொண்டு, வேலையில் கோட்டை விடும் திமுக., போலீஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

கூட்டணி விஷயத்தில் பாஜக., அவசரப்பட்டு விட்டதா?

அதிமுக-பாஜக கூட்டணி 2026 வரை நிலைக்குமா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

கூட்டணி விஷயத்தில் பாஜக., அவசரப்பட்டு விட்டதா?

அதிமுக-பாஜக கூட்டணி 2026 வரை நிலைக்குமா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

மதுரையிலிருந்து ராஜஸ்தானுக்கு கோடை விடுமுறை சிறப்பு ரயில்!

இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

சுமங்கலி கேபிள் விஷன், ரெட் ஜெயண்ட் வரிசையில்… ‘வானம்’!

இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது சுமங்கலி கேபிள் விஷன் வந்த போதான விளைவுகளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது.

காகித கப்பல் விட்ட அமைச்சர் சேகர்பாபு!

இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது காகிதக் கப்பல் விட்ட அமைச்சர் சேகர்பாபு வெறும் கண்துடைப்பு வசனங்களை பேசவேண்டாம்

Entertainment News

Popular Categories