December 6, 2025, 10:09 AM
26.8 C
Chennai

நீட் தேர்வு: மாணாக்கர்கள் அபார மதிப்பெண்கள்.. தஞ்சாவூர் மாணவர் சாதனை!

aravind
aravind

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது.

மூன்று மாணவர்கள் 720க்கு 720 என முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இதில் தஞ்சாவூரை சேர்ந்த மாணவர் ஆர்.அரவிந்த் 720 மதிப்பெண்களுக்கு 710 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், கால்நடை மற்றும் ஆயுஷ் மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. இந்த படிப்புகளுக்கு 2021-22 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த செப்.12-ம் தேதி நாடு முழுவதும் 198 நகரங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் நடைப்பெற்றது.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர் உட்பட 14 நகரங்களில் 224 மையங்களில் தேர்வு நடந்தது. தமிழகத்தில் 1.12 லட்சம் பேர் உட்பட இந்தியா முழுவதும் 16.14 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்சாமி, வங்காளம், உருது உள்பட 13 மொழிகளில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித் தவர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், தேசிய தேர்வு முகமையின் neet.nta.nic.in என்ற இணையதளத்திலும் முடிவுகள் வெளியிட்டுள்ளது. அத்துடன், இந்த முறை மாணவ, மாணவிகளின் இ-மெயில் முகவரிக்கு மதிப்பெண் பட்டியலை அனுப்பியுள்ளது.

அதில், மொத்தமுள்ள 720 மதிப்பெண்களுக்கு தேர்வர் பெற்ற மதிப்பெண், தரவரிசைப் பட்டியலில் பெற்றுள்ள இடம் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

தெலுங்கானாவின் ஐதராபாதைச் சேர்ந்த மிருணாள் குட்டேரி, டில்லியின் தன்மய் குப்தா, மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த கார்த்திகா ஜி.நாயர் ஆகியோர், 720க்கு 720 என முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட 15 மாணவர்களின் முடிவுகள் ரத்து செய்யப்பட்டன.

தஞ்சாவூரை சேர்ந்த மாணவர் ஆர்.அரவிந்த் 720 மதிப்பெண்களுக்கு 710 மதிபெண்களை பெற்று அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 43-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories