December 6, 2025, 2:01 PM
29 C
Chennai

தமிழ்நாட்டில் முதன் முறையாக வளர்ப்பு பிராணிகளுக்கு எரிவாயு தகனமேடை!

Cremation platform
Cremation platform

தங்கள் வீட்டில் ஒரு நபராகவே கருதி செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அப்படி தங்கள் வீட்டில் ஒரு உறுப்பினராகவே இருந்து வளர்ந்து அந்த செல்லப்பிராணி உயிரிழந்துவிட்டால் மற்றவர்களைப் போல் குப்பைத்தொட்டியில் வீசிவிடுவதில்லை.

சாக்கடையில், தெருவோரங்களில் வீசி சென்றுவிட அவர்களுக்கு மனம் இருக்காது.

மனிதர்களை அடக்கம் செய்வது போலவே தங்கள் செல்ல பிராணிக்கும் அடக்கம் செய்யவேண்டும் இறுதிச்சடங்கு செய்யவேண்டும் என்று அவர்கள் நினைப்பது உண்டு.

மனிதர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வது போலவே பாடைகட்டி, பல்லக்கில் சுமந்து இறுதி ஊர்வலம் சென்று தங்கள் செல்லப்பிராணிகளை அடக்கம் செய்யும், எரிக்கும் பழக்கம் இருக்கிறது.

இன்னும் சிலர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி கூட தங்கள் செல்லப்பிராணியின் இறுதிச் சடங்கை நடத்துகின்றனர்.

கிராமத்தில் இருப்பவருக்கு இது வசதியாக போய்விடுகிறது. தங்கள் செல்லப்பிராணிகளை புதைக்கவும் எரிக்கவும் வசதி இருக்கிறது.

நகர்ப்புறங்களை உள்ளவர்களுக்கு இது சிரமமானதாக இருக்கிறது. அவர்கள் புதைக்கவோ எரிக்கவோ இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர் . அதேநேரம் சாலையோரத்தில் குப்பையில் இறந்துபோன தங்கள் செல்லப்பிராணிகளை வீசி விடவும் மனம் இன்றி தவிக்கிறார்கள்.

இதனால் 400, 500 கிலோ மீட்டர் தாண்டி தனி டெம்போ வாகனத்தில் எடுத்துச் சென்ற கூட அடக்கம் செய்யும் நிலை இருக்கிறது.

சென்னையில் இருந்து 500 கிலோ மீட்டர் வேனில் தங்கள் செல்லப்பிராணிகளை எடுத்துச்சென்று அடக்கம் செய்தவர்களும் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்காக இவர்களின் செல்லப்பிராணிகளுக்கு இறுதி அடக்கம் செய்ய மனிதர்களுக்கு போலவே தகன மேடை சென்னையில் அமைந்திருக்கிறது.

சென்னை கிண்டியில் உள்ள ப்ளூகிராஸ் விலங்குகள் நல அமைப்பு சார்பில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டிருக்கிறது.

இதுதான் விலங்குகளுக்காக தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக அமைக்கப்பட்டிருக்கும் எரிவாயு தகனமேடை ஆகும்.

இந்த ப்ளூ கிராஸ் 1964ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒரு அமைப்பு. விலங்குகள், பறவைகள் போன்றவற்றை பராமரித்து வருகிறது.

இந்த நிலையில் ப்ளு கிராசில் மேலும் ஒரு மைல்கல்லாக விலங்குகளுக்கான எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. இது விலங்குகள் நல ஆர்வலர் இடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories