April 27, 2025, 1:46 AM
29.6 C
Chennai

தரமற்ற தீபாவளி பண்டங்கள்.. பறிமுதல் செய்து அழித்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்!

Deepavali sweets
Deepavali sweets

பொள்ளாச்சி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தரமற்றதாக கண்டறியப்பட்ட இனிப்பு, கார வகைகளை கைப்பற்றி அழித்தனர்.

தீபாவளியை முன்னிட்டு பொள்ளாச்சி நகர பகுதிகளில் இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. அவற்றின் தரம் மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பதை கண்டறிய மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்புராஜ், வேலுசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர், கடந்த சில நாட்களாக கோவை சாலை, உடுமலை சாலை, ராமகிருஷ்ணாநகர், ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி, மீன்கரை சாலை, மார்க்கெட் சாலை, வெங்கடேசா காலனி, பெருமாள் செட்டி வீதி ஆகிய பகுதிகளில் உள்ள இனிப்பு தயாரிக்கும் இடங்கள், விற்பனைக்கூடம், உணவகங்கள், பேக்கரிகள் ஆகிய இடங்களில் தொடர் ஆய்வு நடத்தினர்.

இனிப்பு, காரம் தயாரிக்கும் இடம்மற்றும் விற்பனை செய்யும் இடம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.

ALSO READ:  திருப்பரங்குன்றம் தைப் பூசத் திருவிழாவில் அரிய காட்சிகள்!

பழைய செய்தித்தாள்கள் மற்றும் அளவுக்கு அதிகமான செயற்கை நிறமிகள் பயன்படுத்திய, சுகாதாரமற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்த 780 கிலோ எடையுள்ள இனிப்பு மற்றும் கார வகைகளை பறிமுதல் செய்து, அவற்றை குழி தோண்டி புதைத்து, பினாயில் ஊற்றி அழித்தனர்.

இது குறித்து, கோவை மாவட்ட நியமன அலுவலர் கு.தமிழ்செல்வன் கூறும்போது, ‘பால் பொருட்களால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள் 4 நாட்கள் வரை மட்டுமே உண்ணத் தகுந்ததாக இருக்கும்.

அதற்கு மேல், பாக்டீரியா படிந்து, விஷத் தன்மையுள்ளதாக மாறிவிடும். எனவே, பால் பொருட்களால் தயாரிக்கப்பட்ட இனிப்புகளை அன்றன்றைக்கு தயாரித்து விற்று விட வேண்டும்.

மேலும் ஒருமுறை உபயோகித்த சமையல் எண்ணெயை மீண்டும் உணவு தயாரிக்க பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒருமுறை உபயோகித்த சமையல் எண்ணெயை சேகரித்து அதிலிருந்து மறு சுழற்சி முறையில் பயோ-டீசல் உற்பத்தி செய்யும் திட்டம் மாநில உணவு பாதுகாப்பு துறை வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.

பயன்படுத்திய எண்ணெயை, பயோ டீசலாக மாற்றி கொடுக்க, 9087790877, 8445517187, 7339530143 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்’ என்றார்.

ALSO READ:  IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

Entertainment News

Popular Categories