தரமற்ற தீபாவளி பண்டங்கள்.. பறிமுதல் செய்து அழித்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்!

Deepavali sweets
Deepavali sweets

பொள்ளாச்சி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தரமற்றதாக கண்டறியப்பட்ட இனிப்பு, கார வகைகளை கைப்பற்றி அழித்தனர்.

தீபாவளியை முன்னிட்டு பொள்ளாச்சி நகர பகுதிகளில் இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. அவற்றின் தரம் மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பதை கண்டறிய மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்புராஜ், வேலுசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர், கடந்த சில நாட்களாக கோவை சாலை, உடுமலை சாலை, ராமகிருஷ்ணாநகர், ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி, மீன்கரை சாலை, மார்க்கெட் சாலை, வெங்கடேசா காலனி, பெருமாள் செட்டி வீதி ஆகிய பகுதிகளில் உள்ள இனிப்பு தயாரிக்கும் இடங்கள், விற்பனைக்கூடம், உணவகங்கள், பேக்கரிகள் ஆகிய இடங்களில் தொடர் ஆய்வு நடத்தினர்.

இனிப்பு, காரம் தயாரிக்கும் இடம்மற்றும் விற்பனை செய்யும் இடம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

பழைய செய்தித்தாள்கள் மற்றும் அளவுக்கு அதிகமான செயற்கை நிறமிகள் பயன்படுத்திய, சுகாதாரமற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்த 780 கிலோ எடையுள்ள இனிப்பு மற்றும் கார வகைகளை பறிமுதல் செய்து, அவற்றை குழி தோண்டி புதைத்து, பினாயில் ஊற்றி அழித்தனர்.

இது குறித்து, கோவை மாவட்ட நியமன அலுவலர் கு.தமிழ்செல்வன் கூறும்போது, ‘பால் பொருட்களால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள் 4 நாட்கள் வரை மட்டுமே உண்ணத் தகுந்ததாக இருக்கும்.

அதற்கு மேல், பாக்டீரியா படிந்து, விஷத் தன்மையுள்ளதாக மாறிவிடும். எனவே, பால் பொருட்களால் தயாரிக்கப்பட்ட இனிப்புகளை அன்றன்றைக்கு தயாரித்து விற்று விட வேண்டும்.

மேலும் ஒருமுறை உபயோகித்த சமையல் எண்ணெயை மீண்டும் உணவு தயாரிக்க பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒருமுறை உபயோகித்த சமையல் எண்ணெயை சேகரித்து அதிலிருந்து மறு சுழற்சி முறையில் பயோ-டீசல் உற்பத்தி செய்யும் திட்டம் மாநில உணவு பாதுகாப்பு துறை வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.

பயன்படுத்திய எண்ணெயை, பயோ டீசலாக மாற்றி கொடுக்க, 9087790877, 8445517187, 7339530143 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்’ என்றார்.

ALSO READ:  பிஜேபி., உள்ள வந்துடும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories