மாடுகளுக்காக ஆம்புலன்ஸ் சேவை! தூள் கிளப்பும் உபி அரசு!

cow e1562740241697
cow e1562740241697

உத்தர பிரதேசத்தில் மாடுகளுக்காக ஆம்புலன்ஸ் சேவை மற்றும் உதவிகளுக்கான அழைப்பு மையங்களின் சேவை துவக்கப்பட உள்ளது.

பாஜக ஆளும் உ.பி.யின் முதல்வர் ஆதித்யநாத் ஆட்சியில் மாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்கு இந்துக்கள் இடையே பசுமாடுகள் புனிதமாகக் கருதப்படுவது காரணம்.

இதனால், மனிதர்களுக்கானதை போல், மாடுகளுக்கும் சிகிச்சை வசதிகள் அளிக்க ஆம்புலன்ஸ் மற்றும் அழைப்பு மையங்கள் சேவை உ.பி.யில் டிசம்பர் முதல் துவக்கப்படுகிறது.

இது குறித்து மதுராவில் செய்தியாளர்களிடம் தனது அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் நாராயண் சவுத்ரி, ”24 மணி நேரங்களுக்கான இந்த ஆம்புலன்ஸ் சேவைக்கானஎண் 115 மற்றும் உதவிகளுக்கான அழைப்பு மையங்கள் எண் 112ஆகும்.

மாநில அளவில் ஒருங்கிணைந்த அழைப்பு மையம் தலைநகர் லக்னோவில் அமைக்கப்படும். ஒவ்வொரு ஆம்புலன்ஸிலும் ஒரு கால்நடை மருத்துவரும், இரண்டு உதவியாளர்களும் இருப்பார்கள். அழைப்பு வந்த சுமார் 20 நிமிடங்களுக்குள் சேவை கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.

இதுபோன்ற கால்நடைகளுக்கான சேவை வேறு எந்த மாநிலங்களிலும் இல்லை எனக் கருதப்படுகிறது. இத்துடன் இலவசமாக உயரிய வகைப் பசு மாடுகளுக்கான இன உற்பத்தி நிலையமும், அனைத்து பசுக்களையும் அதிகபால் தருவதாக மாற்றும் தொழில்நுட்பமும் துவக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவை துவக்கக் கட்டமாக சோதனை அடிப்படையில் மதுரா உள்ளிட்ட உத்தர பிரதேச மாநிலத்தின் எட்டு மாவட் டங்களில் துவக்கப்படுவதாகவும் அமைச்சர் நாராயண் சவுத்ரி தெரிவித்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories