பாலாற்றையும்… மரங்களையும் பாதுகாக்க… உதவுங்க முதல்வர் அய்யா!

sand mafia
sand mafia

தமிழ்நாடு முதலமைச்சர் அய்யாவுக்கு வணக்கம்,

ஐயா எனது பெயர் G. ஸ்ரீகாந்த் நான் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா உள்ளி கிராமத்தில் வசிக்கிறேன் ஐயா.
எங்கள் கிராமத்தில் பாலாற்று பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் வனத்துறையினரால் உருவாக்கப்பட்ட சமூக காடு சிலரின் சுய தேவைகளுக்காகவும் மற்றும் சமூக விரோதிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

அழிக்கப்பட்ட காட்டினை மீண்டும் அரசாங்க உதவியுடன் மீட்டெடுத்து சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு மரக்கன்றுகளும் 5 முதல் 20 அடி வரை வளர்ந்து உள்ளன. இதுவரை அரசாங்கம் இதற்கென 15 லட்சம் ரூபாய் மேல் செலவு செய்துள்ளனர். தற்போது இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட பறவைகளும் சில வன உயிரினங்களும் உள்ளன. 25 வகையான மரக்கன்றுகள் உள்ளன.

இந்த சமூகக்காடு இங்கு வளர்ந்தால் மண் அரிப்பைத் தடுக்கும் மேலும் ஊருக்குள் தண்ணீர் வராமல் செய்யும். அதனால் அரசாங்கத்தின் உதவியுடன் 100 நாட்கள் பணியாளர்களின் உழைப்பில் இந்த குறுங்காட்டை பராமரித்து வருகிறோம். ஒரு அடர்ந்த குறுங்காட்டை உருவாக்கி அதை வனத்துறையிடம் முதலமைச்சரின் கரங்களால் ஒப்படைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக அதிகாரிகள் வேறு பகுதியில் ஆற்றின் கரையை வலுப்படுத்துவதற்காக இங்குள்ள ஆற்று மணல்களை அள்ளி சென்று வருகின்றனர். இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் அழியும் தருவாயில் உள்ளன. தமிழக முதல்வர் ஐயா இதனை உடனே தலையிட்டு காட்டை பாதுகாக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை காப்பாற்ற கருணை காட்டுங்கள் ஐயா.

  • G. ஸ்ரீகாந்த்
    உள்ளி பஞ்சாயத்து, குடியாத்தம்.
    +91 72000 17771

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

Topics

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

Entertainment News

Popular Categories