April 27, 2025, 9:48 PM
30.2 C
Chennai

தமிழக பாஜகவை சேர்ந்த படுகர் சமூக பெண் சபிதா போஜனுக்கு பதவி வழங்கிய மத்திய அரசு!

மத்திய அரசின் ‘வீடு மற்றும் நகர்புற விவகாரங்கள்’ அமைச்சகத்தின், ‘வீட்டுவசதி மற்றும் நாகர்புற வளர்ச்சி கழகத்தின்’ தனி இயக்குனராக தமிழக பாஜகவை சேர்ந்த படுகர் சமூக பெண் சபிதா போஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நியமனத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சபிதா போஜன் சமூகவியலில் எம்.ஏ, மனித வளத்தில் எம்பிஏ பட்டம், கூட்டுறவு துறையில் டிப்ளமோ முடித்தவர் ஆவர்.கார்ப்பரேட், கல்வி மற்றும் மேலாண்மைத் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிறுவனங்களில் மாநில மற்றும் பிராந்தியத் தலைவராக முக்கியப் பதவிகளை வகித்த அனுபவம் கொண்டவர்.

கவிஞரும், எழுத்தாளருமான அவருக்கு 2019 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் ‘தமிழ்ச் செம்மல்’ விருது கிடைத்தது. இதுமட்டுமின்றி சமூக பணியாற்றும் இவர், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இளைஞர்கள், பெண்கள் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டிற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இவர் தமிழக பாஜக பிரிவில் முக்கிய பணியாற்றியவர் ஆவர்.

ALSO READ:  தெருக்களுக்கு சுதந்திரப் போராட்ட தியாகிகள் பெயர்களைச் சூட்டுக!

இந்நிலையில், இந்த ஹட்கோ தனி இயக்குநர் பதவி குறித்து உற்சாகமாக தனது பேஸ்புக் பக்கத்தில் சபிதா போஜன் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘இந்திய அரசின், ‘வீடு மற்றும் நகர்புற விவகாரங்கள்’ அமைச்சகத்தின், ‘வீட்டுவசதி மற்றும் நாகர்புற வளர்ச்சி கழகத்தின்’ தனி இயக்குனராக என்னை நியமித்த மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிஜிக்கும், குறிப்பிட்ட துறையின் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கும் மனதார நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

என்னை பரிந்துரைத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், கட்சியின் தலைமைக்கும், ஏனைய பிரதிநிதிகளுக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

என் அரசியல் இறைவனாம் பிரதமரின் தேச மேம்பாட்டில் நானும் அங்கம் வகிக்க வழிகாட்டிய எம் முன்னோர் ஆசிக்கும், குலதெய்வத்திற்கும், இறைவனுக்கும், இயற்கைக்கும், இனத்திற்கும் என்றும் உரியவளாய் இருப்பேன்.

என்மேல் நம்பிக்கை வைத்த அத்தனை நல்லுள்ளங்களின் நம்பிக்கையை காப்பாற்றி என் கடமையை செவ்வனே செய்வேன் என உறுதியளிக்கிறேன்.
நன்றி!!! சிவார்ப்பணம்!!! ‘ என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப் பட்டதாக பாஜக., குற்றச்சாட்டு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

Topics

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா –...

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

Entertainment News

Popular Categories