எந்திரத்தால் காயமடைந்த பாம்பிற்கு ட்ரீட்மென்ட்!

Published:

snake 1 3 - 2026

பொக்லைன் எந்திரத்தில் சிக்கி காயமடைந்த நல்ல பாம்புக்கு வனத்துறை காப்பகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சென்னை கொரட்டூர் பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது ஐந்தடி நீளமுள்ள இரண்டு நல்ல பாம்புகள் அந்த பகுதியில் பதுங்கி இருந்தன. அதில் ஒரு நல்ல பாம்பு எந்திரத்தில் சிக்கி காயம் அடைந்தது.

snake 1 4 - 2026

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனைத் தொடர்ந்து தனசேகர் தலைமையிலான வேட்டை தடுப்பு காவலர்கள் இரண்டு பாம்புகளையும் லாவகமாக பிடித்தனர்.

இதில் காயமடைந்த நல்ல பாம்புக்கு வனத்துறை காப்பகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர் ஷவன்குமார் தலைமையிலான இரண்டு பெண் மருத்துவர்கள் நல்ல பாம்பிற்கு சிகிச்சை அளித்தனர்.

பாம்பு பூரண குணம் அடைந்த பிறகு அது வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறை அதிகாரிகள் கூறினர் .

Related articles

Recent articles

spot_img