December 6, 2025, 11:59 AM
29 C
Chennai

சியோமி 12 சீரிஸ்: சிறப்பம்சங்கள்!

Xiaomi 12 Series - 2025

ஸ்மார்ட்போன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு புதிய ஸ்மார்ட்போன் மாடல் தான் சியோமி நிறுவனத்தின் அடுத்து வரவிருக்கும் சியோமி 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள். இந்த ஸ்மார்ட்போனின் டீசர் வெளியாகிய நேரத்தில் இருந்து இதன் வருகைக்காக ஏராளமானோர் காத்திருக்கின்றனர்.

ஸ்மார்ட்போன் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கும் சியோமி 12 இன் வருகை
இப்போது சியோமி தயாரிப்பில் உருவாக்கி வெளிவரக் காத்திருக்கும் புதிய சியோமி 12 சீரிஸ் ஸ்மார்ட்போனின் சரியான அறிமுக தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான Xiaomi தனது பட்டியலில் சியோமி 12 என்ற மாடல் பெயர் உடன் வரவிருக்கும் ஃபிளாக்ஷிப் சாதனம் குறித்த பல தகவல்களை இப்போது வெளியிட்டுள்ளது.

Xiaomi மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், சமீபத்தில் வெளியான தகவல் தயாரிப்பாளர்களிடமிருந்து தான் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவலை வெளிப்படுத்தியுள்ளது.

சமீபத்திய கசிவுகள் படி, ஸியோமியின் புதிய சியோமி 12 சாதனம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய Xiaomi 12 ஸ்மார்ட்போன் சாதனம் ஸ்னாப்டிராகன் 898 இல் இயங்கக்கூடும் என்று கடந்த காலங்களில் வெளியான ஒரு முக்கிய தகவல் நம்பகமான டிப்ஸ்டர் வழியாக வெளிப்பட்டது.

இது Qualcomm இன் மிக சமீபத்திய சிப்செட் மாடல்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளியான தகவலின் படி, சியோமி தயாரிப்பாளர்கள் Xiaomi 12 ஸ்மார்ட்போன் உடன் Xiaomi 12X என்ற ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் நடுப்பகுதியில் சீனாவில் நடக்கும் ஷாப்பிங் திருவிழாக்களுடன் இந்த சாதனம் ஒத்துப்போகிறது என்பதை மனதில் வைத்து வரும் டிசம்பர் 12 ஆம் தேதி இந்த சாதனத்தை நிறுவனம் வெளியிடுவதற்குப் பொருத்தமான தேதியாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Qualcomm இன்னும் அதன் வரவிருக்கும் சக்திவாய்ந்த சிப்செட் Snapdragon 898 ஐ அறிமுகப்படுத்த உள்ளது. அறிக்கைகளின் படி, Xiaomi 12 ஸ்மார்ட்போன் Snapdragon SM8450 இல் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது Snapdragon 898 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Xiaomi 12 ஸ்மார்ட்போன் ஆனது 50 எம்பி பின்பக்க கேமராவைக் கொண்டிருக்கக் கூடும் என்றும் மேலும் வதந்திகள் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளன என்றும் முன்னர் தெரிவிக்கப்பட்டது.

சாதனம் 50 எம்பி சாம்சங் ஜிஎன்5 பிரைமரி கேமராவைக் கொண்டிருக்கும் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சாதனம் 200 எம்பி ஸ்னாப்பரைக் கொண்டிருக்கவும் ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது என்று சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.

முதன்மை கேமராவுடன், மூன்று கூடுதல் 48 எம்பி கேமராக்கள் 2x, 5x மற்றும் 10x ஜூம் திறன் கொண்ட சாதனத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Xiaomi 12 இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரையும் கொண்டுள்ளது.

மறுபுறம், சியோமி நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யும் Xiaomi 12X ஸ்மார்ட்போன் மாடலும் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி அன்று Xiaomi 12 ஸ்மார்ட்போன் உடன் உற்பத்தியாளர்களால் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சியோமி 12 எக்ஸ் ஸ்மார்ட்போன் நிறுவனத்திடம் இருந்து இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் மற்றொரு ஸ்மார்ட்போன் சாதனமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சியோமி 12X ஸ்மார்ட்போன் மாடலில் 6.28′ இன்ச் கொண்ட 1,080 x 2,400 பிக்சல்கள் உடைய OLED டிஸ்ப்ளே இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய சியோமி 12x ஸ்மார்ட்போன் சாதனம் Snapdragon 870 சிப்செட் இல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய சியோமி 12X ஸ்மார்ட்போன் நிறுவனத்தால் இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட சியோமி Mi 11X இன் தொடர்ச்சியாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இது உண்மையில் Mi 11X ஸ்மார்ட்போனின் வாரிசா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த சாதனத்தில் உள்ள கேமரா அமைப்பு 50MP கேமராவுடன், முன்புறத்தில் 20MP செல்ஃபி கேமராவுடன் இருக்கும் என ஊகிக்கப்படுகிறது.

புதிய சியோமி 12X ஸ்மார்ட்போன் சாதனம் 5000mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் என்றும், இது 33W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 67W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிக்கைகள் உண்மையாக இருந்தால் மற்றும் Snapdragon 898 ஸ்மார்ட்போனில் இடம்பெறும் என்றால், Qualcomm செயலிகளை இவ்வளவு பெரிய அளவில் அறிமுகப்படுத்துவது செயலியின் ரசிகர்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை

ஸ்னாப்டிராகன் செயலிகள் அதன் முக்கிய போட்டியாளரான எக்ஸினோஸ் சிப் மாறுபாடுகளை விட ஒட்டுமொத்த செயல்திறன், பேட்டரி ஆயுள் மற்றும் வெப்பக் கட்டுப்பாடு என்று வரும்போது எப்போதும் இது சிறப்பாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories