அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழத்தில் பயில்வதற்கான முழு ஊக்கத்தொகையான ரூ.3 கோடியை தமிழக மாணவி பெற்றிருக்கிறார்.
ஈரோடு மாவட்டம் காசிபாளையத்தைச் சேர்ந்த விவசாயியான சுவாமிநாதனின் மகள் ஸ்வேகா சுவாமிநாதன்(17) டெக்ஸ்டெரிட்டி குளோபல் நிறுவனத்தின் தலைமைத்துவ மேம்பாடு மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் பயிற்சி பெற்றதாகவும் தற்போது அவர் அமெரிக்காவிலுள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ள ரூ.3 கோடி வரை ஊக்கத்தொகை பெற்றிருப்பதாக அந்நிறுவனத்தின் நிறுவனர் சரத் விவேக் சாகர் டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.
https://twitter.com/SharadTalks/status/1472829233198108672?ref_src=twsrc%5Etfw