கொரோனா சுனாமி: உயரும் பாதிப்பு எண்ணிக்கை.. எச்சரிக்கும் WHO!

Tetros Adonom - 2026

உலக நாடுகளையே இரண்டு ஆண்டுகளாக அலறவிட்டுக் கொண்டிருக்கிறது கொரோனா.

அதன் சமீபத்திய உருமாறிய வடிவம் தான் ஒமைக்ரான் எனும் மின்னல் வேக கொரோனா. இதுவரை உருமாறிய வகையில் மிகவும் அபாயகரமானதாகப் பார்க்கப்பட்டது டெல்டா.

இந்தியாவில் 2ஆம் அலையை அது தான் உருவாக்கியது. இன்னமும் இங்கே தான் நீடிக்கிறது. பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், சீனா போன்ற பல்வேறு நாடுகளுக்கும் சென்றது.

ஆனால் அதையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு அதிவேகமாகப் பரவுகிறது ஒமைக்ரான். ஒரே மாதத்தில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் பரவியுள்ளது . டெல்டா போல ஒமைக்ரான் ஆட்டிப் படைப்பதில்லை. வீட்டிலிருந்தபடியே அதிலிருந்து குணமடைந்துவிடலாம். ஆனால் விஷயம் அதுவல்ல.

இரட்டைக் குழல் துப்பாக்கியாக டெல்டாவும் ஒமைக்ரானும் சேர்ந்து பரவுகின்றன. இதனால் தொற்று எண்ணிக்கை எதிர்பாரா விதமாக உயர்கின்றன. அமெரிக்காவில் தினசரி 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.

பிரிட்டன், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளின் நிலை மோசம் தான். இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது கொரோனா பாதிப்பு. ஒமைக்ரான் பாதிப்பு ஆயிரத்தை நெருங்கிறது.

மொத்த பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்தை கடந்து செல்கிறது. மும்பையில் 3ஆம் அலை தொடங்கிவிட்டது. சென்னையில் கடந்த 10 நாட்களில் படிப்படியாக ஏறிக் கொண்டிருக்கிறது.

இதனால் அங்கே கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது. நிலைமை இப்படியிருக்க உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் பகீர் செய்தியைக் கூறியிருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெல்டா, ஒமைக்ரானால் உலக நாடுகள் இரட்டை அச்சுறுத்தலில் உள்ளன. இரண்டும் சேர்ந்துகொண்டு பாதிப்பு எண்ணிக்கையை உச்சத்திற்கு கொண்டு செல்கின்றன.

இவை மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்கள் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை உயர காரணமாகியுள்ளன.

இரண்டும் மிகப்பெரும் கொரோனா சுனாமியை ஏற்படுத்துகின்றன. ஏற்கெனவே சோர்வுற்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு அழுத்ததை கொடுக்கும். ஒட்டுமொத்த உலக சுகாதார கட்டமைப்பும் ஆட்டம் காணும்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories