குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் மார்பளவு ஐம்பொன் சிலை கும்பகோணத்தில் வடிவமைக்கப்படுகிறது.
பிபின் ராவதின் வீரத்தை போற்றும் விதமாக முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஷைன் இந்தியன் சோசியல் வெல்ஃபார் பவுண்டேஷன் சார்பில் 120 கிலோ எடையில் அவரது மார்பளவு ஐம்பொன் சிலை தயாரிக்கப்படுகிறது.
கும்பகோணம் ராஜேஸ்வரன் வீதியில் உள்ள சிற்பக்கூடத்தில் தயாராகி வரும் சிலையை தில்லியில் உள்ள போர் நினைவு சின்னத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமர்பிக்கப்போவதாக முன்னாள் ராணுவத்தினர் கூறியுள்ளனர்