வாட்ஸ் அப் மெசேஜ் உண்மையா போலியா..? நீங்களே அறியலாம்!

whatsapp - 2026

வாட்ஸ்அப் என்ற புதிய அத்தியாயம் பிறந்த பிறகு, ஃபோனில் மெசேஜஸ் என்ற ஒரு வசதி இருப்பதே நம்மில் பெரும்பாலனவர்களுக்கு மறந்து போயிருக்கும்.

சாதாரண பட்டன் செல் முதல், தற்போதைய ஸ்மார்ட்ஃபோன்கள் வரையில் வெகு காலத்திற்கு பிறருக்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பவும், எதிர் முனையில் இருந்து தகவல்களை பெறவும் உதவிகரமாக இருந்தது மெசேஜஸ் என்னும் வசதி தான்.

ஆனால், வாட்ஸ்அப் வருகைக்குப் பிறகு, எல்லாமும் அது மட்டுமே என்றாகிவிட்டது. இப்போது, சில மார்க்கெட்டிங் மெசேஜ்கள், வங்கி பரிவர்த்தனை குறித்து அப்டேட்டுகள், அரசு அறிவிப்புகள், நெட்வொர்க் தகவல்கள் உள்ளிட்ட ஒரு சில செய்திகள் மட்டுமே மெசேஜஸ் வழியாக வருகிறது.

பெரும்பாலும் நண்பர்கள், சுற்றம் என யாராக இருந்தாலும், அவர்கள் எப்போதும் ஆன்லைனில் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் வாட்ஸ் அப் மூலமாகத்தான் நாம் தகவல்களை அனுப்பி வருகிறோம்.

பரஸ்பரம் ஒருவரை, ஒருவர் விசாரித்துக் கொள்வதும், தனிப்பட்ட தகவல்களை பரிமாறிக் கொள்வதும் வாட்ஸ் அப்-பில் இயல்பான ஒன்றுதான். ஆனால், வாட்ஸ் அப் செயல்பாடு இத்தோடு நின்றுவிடவில்லை.

ஒரு செய்தித்தாள் அல்லது தொலைக்காட்சிக்கு ஈடாக நாள்தோறும் எண்ணற்ற செய்திகள், தகவல்கள் நமக்கு வந்து சேருகின்றன.

குறிப்பாக, எண்ணற்ற குரூப்களில் மெம்பர்களாக இருந்தால், அதன் தாக்கத்தை நாம் கண்டிப்பாக உணர்ந்திருப்போம். குரூப்களில் வந்து குவியும் செய்திகளை படிக்க நேரமின்றி, நாம் அதை ‘ஜஸ்ட் ஓப்பன்’ செய்துவிட்டு கடந்து செல்வது உண்டு.

ஒரு தொலைக்காட்சி அல்லது செய்தித்தாள் வேண்டும் என்ற அவசியம் இல்லாமல், நாம் இருக்கும் இடத்தில், நம் உள்ளங்கைகளில் பல விதமான செய்திகளை கொட்டித் தரும் வாட்ஸ் அப், என்பது உண்மையில் பயனுள்ள ஒன்றுதான்.

உண்மைச் செய்திகளுடன் பல போலி செய்திகளும் வரத் தானே செய்கிறது.

இதற்குத்தான் புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது. அதாவது வெவ்வேறு செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து இந்த சேவையை வாட்ஸ் அப் தொடங்கியிருக்கிறது.

உங்கள் வாட்ஸ்அப்புக்கு வரும் எந்தவொரு செய்தி, ஃபோட்டோ, வீடியோ, வைரல் செய்தி அல்லது வாய்ஸ் பதிவு என எதுவானாலும் அதுகுறித்து உங்களுக்கு சந்தேகம் எழுந்தால், கீழ்காணும் எண்களுக்கு அந்த குறிப்பிட்ட செய்தியை பார்வார்டு செய்தால் போதும்.

அவற்றின் உண்மைத்தன்மை உங்களுக்கு தெரியப்படுத்தப்படும். ஆங்கிலம் மற்றும் 11 இந்திய மொழிகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  1. ஏஎஃப்பி – +91 95999 73984
  2. பூம் – +91 77009-06111 / +91 77009-06588
  3. ஃபேக்ட் கிரெசெண்டோ – +91 90490 53770
  4. ஃபேக்ட்லி – ​​+91 92470 52470
  5. இந்தியா டுடே – +91 7370-007000
  6. நியூஸ்செக்கர் – +91 99994 99044
  7. நியூஸ் மொபைல் – +91 11 7127 9799
  8. குயிண்ட் வெப்கூப் – +91 96436 51818
  9. தி ஹெல்தி இந்தியன் ப்ராஜக்ட் – +91 85078 85079
  10. விஸ்வாஸ் நியூஸ் +91 92052 70923 / +91 95992 99372

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

Topics

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

Entertainment News

Popular Categories