ஆண்டாள் கோவில் ஊழியரை எட்டி உதைத்த கணக்காளர்.. வைரலான வீடியோ!

srivilliputhur - 2026

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஊழியர் ஒருவரை கோயில் கணக்காளர் காலால் எட்டி உதைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லபுரம் தெருவை சேர்ந்தவர் கர்ணன், 40. ஆண்டாள் கோயிலில் காவலராக பணியாற்றி வருகிறார்.

இவரை கோயில் செயல் அலுவலர் அலுவலகத்தில் வைத்து, உடன் பணியாற்றும் கணக்காளர் சுப்பையா காலால் எட்டி உதைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. இது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

karnan1 - 2026

இதுகுறித்து கோயில் ஊழியர்கள் கூறுகையில், ‘கடந்த மாதம் கோயிலுக்கு அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் வருகை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்காக செயல் அலுவலர் அறையில் கூடுதல் நாற்காலிகளை கர்ணன் எடுத்துச் செல்லும்போது சுப்பையா காலால் எட்டி உதைத்துள்ளார்,’என்றனர்.

கணக்காளர் சுப்பையா கூறுகையில், ”நானும் கர்ணனும் தந்தை, மகன் போன்ற நட்பு உள்ளவர்கள். நான் விளையாட்டுத்தனமாக செய்தது, தற்போது பிரச்னைக்குள்ளாகி உள்ளது,”என்றார்.

கர்ணன் கூறியதாவது, ”இச்சம்பவம் நடந்து பல நாட்கள் ஆகிவிட்டது. கணக்காளர் சுப்பையா என்னை காலால் எட்டி உதைத்தது உண்மை. அது எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது.

karnan - 2026

தற்போது நான் மருத்துவ சிகிச்சை பெற்று விடுப்பில் ஓய்வெடுத்து வருகிறேன். அவரை பிடிக்காதவர்கள் வீடியோ வெளியிட்டிருக்கலாம். வீடியோ வெளியானதும் வேதனை அதிகமாகியுள்ளது. நான் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை,” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories