ஆண்டாள் கோவில் ஊழியரை எட்டி உதைத்த கணக்காளர்.. வைரலான வீடியோ!

srivilliputhur - 2026

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஊழியர் ஒருவரை கோயில் கணக்காளர் காலால் எட்டி உதைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லபுரம் தெருவை சேர்ந்தவர் கர்ணன், 40. ஆண்டாள் கோயிலில் காவலராக பணியாற்றி வருகிறார்.

இவரை கோயில் செயல் அலுவலர் அலுவலகத்தில் வைத்து, உடன் பணியாற்றும் கணக்காளர் சுப்பையா காலால் எட்டி உதைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. இது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

karnan1 - 2026

இதுகுறித்து கோயில் ஊழியர்கள் கூறுகையில், ‘கடந்த மாதம் கோயிலுக்கு அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் வருகை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்காக செயல் அலுவலர் அறையில் கூடுதல் நாற்காலிகளை கர்ணன் எடுத்துச் செல்லும்போது சுப்பையா காலால் எட்டி உதைத்துள்ளார்,’என்றனர்.

கணக்காளர் சுப்பையா கூறுகையில், ”நானும் கர்ணனும் தந்தை, மகன் போன்ற நட்பு உள்ளவர்கள். நான் விளையாட்டுத்தனமாக செய்தது, தற்போது பிரச்னைக்குள்ளாகி உள்ளது,”என்றார்.

கர்ணன் கூறியதாவது, ”இச்சம்பவம் நடந்து பல நாட்கள் ஆகிவிட்டது. கணக்காளர் சுப்பையா என்னை காலால் எட்டி உதைத்தது உண்மை. அது எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது.

karnan - 2026

தற்போது நான் மருத்துவ சிகிச்சை பெற்று விடுப்பில் ஓய்வெடுத்து வருகிறேன். அவரை பிடிக்காதவர்கள் வீடியோ வெளியிட்டிருக்கலாம். வீடியோ வெளியானதும் வேதனை அதிகமாகியுள்ளது. நான் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை,” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories