March 27, 2025, 7:03 PM
28.9 C
Chennai

இலங்கை அதிபர் மனைவியுடன் மாலத்தீவிற்கு தப்பிச் சென்றார் பிரதமர் அலுவலகம் மற்றும் விமானப்படை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

இந்தியாவுக்கு செல்ல முடியாத நிலையில், 2 நாள் அலைக்கழிப்பிற்கு பிறகு இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலகிய பிறகு அதிகாலையில் கோத்தபய ராஜபக்சே மனைவியுடன் மாலத்தீவிற்கு தப்பிச் சென்றார். பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதாரம் சீரழிந்ததால் ஆவேசம் கொண்ட போராட்டக்காரர்கள் கடந்த சனிக்கிழமை அதிபர் மாளிகையை கைபற்றினர்.பிரதமர் ரணிலின் வீடும் தீக்கரையாக்கப்பட்டது. முன்னதாக தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே இன்றைய தினம் பதவி விலகுவதாக அறிவித்து இருந்தார். அவர் வெளிநாடு சென்றதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று நாடாளுமன்ற அவைத் தலைவர் மகிந்த யாப்பா அபே வர்த்தன தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று கோத்தபய ராஜபக்சே பதவி விலகல் கடிதத்தை அதிகாரி மூலம் அவைத் தலைவருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.அவரது இளைய சகோதரர் பசில் அமெரிக்கா செல்வதற்காக கொழும்பு விமான நிலையத்திற்கு வந்த போது, மக்களின் எதிர்ப்பால் பயணம் தடைபட்டது. இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே அதே விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்ததாக கூறப்படுகிறது. துபாய்க்கு பயணிக்கஅவர் விரும்பியுள்ளார். ஆனால் முக்கிய பிரமுகர்களுக்கான சிறப்பு சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் செல்லும் வழியில் போகுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வழியாகச் சென்றால் மக்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்று அஞ்சி காத்திருந்த கோத்தபய உள்ளிட்டோர் 4 விமானங்களை தவறவிட்டனர்.    

இந்தியாவுக்கு ராணுவ விமானம் மூலம் பயணிக்க அனுமதி கிடைக்காத நிலையில், கடல் வழியாக செல்ல எண்ணி மீண்டும் கடற்படை தளத்திற்கு கோத்தபய சென்றுள்ளார். இந்த நிலையில், இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அன்டோனோவ் 32 ரக ராணுவ ஜெட் விமானத்தில் கோத்தபய அவரது மனைவி லோமா, பாதுகாவலர் மற்றும் ஒருவர் என 4 பேர் மாலத்தீவிற்கு புறப்பட்டு சென்றதக குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சட்டவிரோத பயணத்திற்கு உதவிய ஏர் மார்ஷல் சுதர்ஷன கரகோடா பதிரான மீது வழக்கு தொடரப்படும் என கூறப்படுகிறது. மாலத்தீவு தலைநகர் மாலேவை அதிகாலை 3 மணி அளவில் கோத்தபய அடைந்தது தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன. இதனிடையே லங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறியதை பிரதமர் அலுவலகம் மற்றும் விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்துக்களின் சொத்துகளை சட்ட விரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க துணைபோகும் திமுக., அரசு!

இந்துக்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க தமிழக அரசு துணை போவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

புதிய பாம்பன் பாலம் ஏப்.6ல் திறப்பு; வருகிறார் பிரதமர் மோடி!

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

பஞ்சாங்கம் மார்ச் 27 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: டி காக் அதிரடியில் கோல்கத்தா அணி வெற்றி!

          கொல்கொத்தா அணியின் மட்டையாளர், க்விண்டன் டி காக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Topics

இந்துக்களின் சொத்துகளை சட்ட விரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க துணைபோகும் திமுக., அரசு!

இந்துக்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க தமிழக அரசு துணை போவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

புதிய பாம்பன் பாலம் ஏப்.6ல் திறப்பு; வருகிறார் பிரதமர் மோடி!

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

பஞ்சாங்கம் மார்ச் 27 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: டி காக் அதிரடியில் கோல்கத்தா அணி வெற்றி!

          கொல்கொத்தா அணியின் மட்டையாளர், க்விண்டன் டி காக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

100 இந்துக் குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் நிம்மதியாக வாழ முடியும்; ஆனால்…

100 இந்துக் குடும்பங்களுக்கு இடையே முஸ்லிம்கள் வசிக்க முடியும் ஆனால், 100 முஸ்லிம்களுக்கு மத்தியில் 50 ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது,'' என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு ஏப்.2ல் தொடக்கம்!

கூட்டம் மிகுதியான நாட்களில் பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள நேரடியாகவும் மற்றவர்கள் மேம்பாலம் வழியாகவும் சாமி தரிசனத்திற்கு

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

Entertainment News

Popular Categories