தேசிய கொடியை 75 ஆண்டுகளாக பாதுகாத்து வரும் முதியவர் ..

கர்நாடகாவில் 1947-ம் ஆண்டு ஏற்றப்பட்ட தேசிய கொடியை 75 ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறார் முதியவர் ஒருவர்

images 92 - 2026

இந்த தேசிய கொடி 1947-ம் ஆண்டு சுதந்திர தினத்தின் போது ஏற்றப்பட்டது. அந்த தேசிய கொடியை 1947-ம் ஆண்டு 25 பைசா கொடுத்து கங்காதர் வாங்கி இருந்தார். விஜயாப்புரா : நாடு முழுவதும் நேற்று சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டது. அதுபோல், விஜயாப்புரா மாவட்டம் முத்தேபிகால் தாலுகா தலதவாடி டவுனில் உள்ள ஒரு அரசு பள்ளியிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு நேற்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. ஆனால் அந்த பள்ளியில் ஏற்றப்பட்ட தேசிய கொடி, 75 ஆண்டுகளுக்கு முன்பு, தலதவாடியில் உள்ள ஒரு பள்ளியில் ஏற்றப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. அதாவது தலதவாடி டவுனில் உள்ள அரசு பள்ளியில், நமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததும் கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந்தேதி நள்ளிரவு தேசிய கொடி ஏற்றப்பட்டு இருந்தது. அந்த தேசிய கொடியை பள்ளி ஆசிரியரிடம் இருந்து, அதே கிராமத்தை சேர்ந்த கங்காதர் நரசிங்கராவ் குல்கர்னி என்பவர் வாங்கி வைத்திருந்தார். தற்போது அவருக்கு 91 வயதாகிறது. 1947-ம் ஆண்டு அந்த பள்ளியில் படித்த போது, கங்காதரிடம் தேசிய கொடியை ஆசிரியர் கொடுத்திருந்தார். அதன்பிறகு, அந்த தேசிய கொடியை கங்காதர் 75 ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின் போது 1947-ம் ஆண்டு ஏற்றப்பட்ட, அந்த தேசிய கொடியை எடுத்து தனது வீட்டில் கங்காதர் ஏற்றி மரியாதை செலுத்துவார். சுதந்திர தின பவள விழா காரணமாக தான் 75 ஆண்டுகளாக பாதுகாத்து வரும் அந்த தேசிய கொடியை, தலதவாடி டவுனில் உள்ள அரசு பள்ளியில் ஏற்றுவதற்காக கங்காதர் கொடுத்திருந்தார். இதையடுத்து, அந்த பள்ளியில் நேற்று 1947-ம் ஆண்டு ஏற்றப்பட்ட தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 75 ஆண்டுகள் தனிச்சிறப்பு பெற்ற தேசிய கொடியை பள்ளியில் ஏற்றியதால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த தேசிய கொடியை 1947-ம் ஆண்டு 25 பைசா கொடுத்து கங்காதர் வாங்கி இருந்தார். அன்று முதல் தற்போது வரை அந்த தேசிய கொடியை கங்காதர் பாதுகாத்து வருகிறார். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக தனது வீட்டில் அந்த தேசிய கொடியை வைக்காமல், தலதவாடி கிராமத்தில் உள்ள வங்கியின் லாக்கரில் அவர் வைத்திருக்கிறார். தேசிய கொடிக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக லாக்கரில் வைத்திருப்பதாக கங்காதர் கூறியுள்ளார். தேசிய கொடி மீது கங்காதருக்கு இருக்கும் மரியாதையை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.

ALSO READ:  சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories