16-வது ஆண்டாக 20 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி..

image 750x 630f713465acb 1 - 2026

சென்னை சிட்லபாக்கத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 16-வது ஆண்டாக 20 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி தொடங்கியுள்ளது. விநாயகரின் அபூர்வ புகைப்படங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

சென்னையை அடுத்த குரோம்பேட்டை, ராதா நகர், கிருஷ்ணமாச்சாரி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். சிவில்‌ என்ஜினீயரான இவர், தீவிர விநாயகர் பக்தர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளை சேகரித்து, ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களுக்கு இலவசமாக கண்காட்சி நடத்தி வருகிறார். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கண்காட்சி நடத்தப்படவில்லை.

- 2026
- 2026

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 16-வது ஆண்டாக 20 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நேற்று தொடங்கியது. சிட்லபாக்கம் ஸ்ரீ லட்சுமி ராம் கணேஷ் மகாலில் நடக்கும் இந்த கண்காட்சியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். இதில் பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியில், ஸ்கூட்டர் ஓட்டும் விநாயகர், 5 அடி உயர தங்க நிற யானையில் விநாயகர், சிவனுக்கு பூஜை செய்யும் விநாயகர், சந்தனத்திலான விநாயகர் சிலை, கண்ணாடி மாளிகையில் விநாயகர், படகு ஓட்டும் விநாயகர், திருக்கல்யாண விநாயகர், செஸ், கிரிக்கெட், கேரம் விளையாடும் விநாயகர், 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் தாமரையில் மலரும் மூவர்ண நிறத்திலான விநாயகர் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறுவிதமான விநாயகர் சிலைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் விநாயகரின் அபூர்வ புகைப்படங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை வருகிற 12-ந் தேதி வரை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பொதுமக்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories