December 6, 2025, 7:40 AM
23.8 C
Chennai

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.45 லட்சம் அபராதம்..

1755939 tirupatitemple - 2025

ஹரிபாஸ்கர் என்பவர் கடந்த 2006-ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் மேல் சாத்து வாஸ்திர சேவை என்ற தரிசனத்திற்காக 2 பேருக்கு ரூ.12 ஆயிரத்து 250 கட்டி பதிவு செய்தார். தேவஸ்தானம் மீது சேலம் நுகர்வோர் குறை தீர்மானத்தில் வக்கீல் செல்வகீதன் மூலம் வழக்கு தொடரப்பட்டது. 17 வருடம் காத்திருந்து தரிசனம் செய்ய முடியாததால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.45 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் அழகாபுரம் மணிமேகலை தெருவில் வசித்து வருபவர் ராஜகோபால். இவரது மகன் ஹரிபாஸ்கர் என்பவர் கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந்தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் மேல் சாத்து வாஸ்திர சேவை என்ற தரிசனத்திற்காக 2 பேருக்கு ரூ.12 ஆயிரத்து 250 கட்டி பதிவு செய்தனர்.

அப்போது அவர்களுக்கு எஸ்.எல். நம்பர் ஒதுக்கப்பட்டு 2020-ம் ஆண்டு ஜூலை 10-ந்தேதி தரிசனத்திற்கு ஒதுக்கப்பட்டு ரசீதும் குறிப்பிட்டு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மேல் சாத்து வாஸ்திர சேவை இந்த தரிசனம் செய்ய வேறு தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

பின்னர் அந்த வாய்ப்பு இல்லை என்றும் தற்போது பிரேக் தரிசனம் செய்ய தேதி தரப்படும் என தேவஸ்தானம் மூலம் அறிவிப்பு அனுப்பப்பட்டது.

ஆனால் 17 வருடம் காத்திருந்தும் தரிசனம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனவே தேவஸ்தானம் மீது சேலம் நுகர்வோர் குறை தீர்மானத்தில் வக்கீல் செல்வகீதன் மூலம் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி திருப்பதி தேவஸ்தானம் ஒரு வருட காலத்தில் மனுதாரருக்கு மேல் சாத்து வாஸ்திர சேவை என்ற தரிசனம் செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக ரூ. 45 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் இந்த தரிசனத்திற்காக கட்டிய ரூ.12,250 தொகையும் உத்தரவு பிறப்பித்த இரண்டு மாத காலத்தில் திருப்பி கொடுக்க வேண்டும். இல்லாவிடில் 6 சதவீதம் வட்டியுடன் சேர்த்து தர வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.

திருப்பதி கோவில் நிர்வாகம் மீதான சேலம் நுகர்வோர் கோர்ட்டின் இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories