அகமதாபாத் – மும்பை 491 கி.மீ. தூரத்தை 5 மணி நேரத்தில் கடந்த வந்தே பாரத் ரயில்

அகமதாபாத்-மும்பை இடை யிலான ‘வந்தே பாரத்’ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்த ரயில் 491 கி.மீ. தூரத்தை சுமார் 5 மணி நேரத்தில் கடந்தது.

குஜராத் மாநிலம் அகமதாபாத், மகாராஷ்டிர மாநிலம் மும்பை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த 9-ம் தேதி சோதனை ஓட்டம் நடைபெற்றது. இது வெற்றி பெற்றதாக மேற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனையின்போது இந்த ரயிலின் வேகம் 52 விநாடிகளில் 100 கிலோ மீட்டரை தொட்டது. இதற்கு முந்தைய வந்தே பாரத்ரயில் 54.6 விநாடிகள் எடுத்துக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரயில் அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு இடைநிற்றல் இல்லாமல் செல்வதற்கு (491 கி.மீ.) 5 மணி நேரம் 14 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. அதேநேரம் மும்பையிலிருந்து திரும்பிய அந்த ரயில் 5 மணி நேரம் 4 நிமிடங்களில் அகமதாபாத்தை அடைந்தது. இரு நகரங்களுக்கிடையே நிறுத்தப்பட்டு இயக்கினால் பயணம் 6 மணி நேரமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் அதிகபட்சம் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் பயணிக்கும்.

எல்லாம் திட்டமிட்டபடி நடைபெற்றால் இந்த மாத இறுதி அல்லது தீபாவளி பண்டிகைக்குள் இந்த ரயில் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் சேவையைத் தொடங்க, ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

அகமதாபாத், மும்பை வழித்தடத்தில் ஏற்கெனவே சதாப்தி மற்றும் தேஜஸ் ஆகிய விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதே வழித்தடத்தில் புல்லட் ரயிலை இயக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புல்லட் ரயில் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். இதன்மூலம் பயண நேரம் 2 முதல் 3 மணி நேரமாகக் குறையும்.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் வாரணாசி-புதுடெல்லி இடையே இயக்கப்படுகிறது. 16 ஏ.சி. பெட்டிகள், நவீன இருக்கைகள், மோதல் தவிர்ப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன வசதிகள் கொண்ட இந்த ரயிலில் 1,128 பேர் பயணிக்கலாம். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 வந்தே பாரத்ரயில்களை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

images 94 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories