அகமதாபாத் – மும்பை 491 கி.மீ. தூரத்தை 5 மணி நேரத்தில் கடந்த வந்தே பாரத் ரயில்

அகமதாபாத்-மும்பை இடை யிலான ‘வந்தே பாரத்’ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்த ரயில் 491 கி.மீ. தூரத்தை சுமார் 5 மணி நேரத்தில் கடந்தது.

குஜராத் மாநிலம் அகமதாபாத், மகாராஷ்டிர மாநிலம் மும்பை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த 9-ம் தேதி சோதனை ஓட்டம் நடைபெற்றது. இது வெற்றி பெற்றதாக மேற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனையின்போது இந்த ரயிலின் வேகம் 52 விநாடிகளில் 100 கிலோ மீட்டரை தொட்டது. இதற்கு முந்தைய வந்தே பாரத்ரயில் 54.6 விநாடிகள் எடுத்துக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரயில் அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு இடைநிற்றல் இல்லாமல் செல்வதற்கு (491 கி.மீ.) 5 மணி நேரம் 14 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. அதேநேரம் மும்பையிலிருந்து திரும்பிய அந்த ரயில் 5 மணி நேரம் 4 நிமிடங்களில் அகமதாபாத்தை அடைந்தது. இரு நகரங்களுக்கிடையே நிறுத்தப்பட்டு இயக்கினால் பயணம் 6 மணி நேரமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் அதிகபட்சம் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் பயணிக்கும்.

எல்லாம் திட்டமிட்டபடி நடைபெற்றால் இந்த மாத இறுதி அல்லது தீபாவளி பண்டிகைக்குள் இந்த ரயில் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் சேவையைத் தொடங்க, ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அகமதாபாத், மும்பை வழித்தடத்தில் ஏற்கெனவே சதாப்தி மற்றும் தேஜஸ் ஆகிய விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதே வழித்தடத்தில் புல்லட் ரயிலை இயக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புல்லட் ரயில் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். இதன்மூலம் பயண நேரம் 2 முதல் 3 மணி நேரமாகக் குறையும்.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் வாரணாசி-புதுடெல்லி இடையே இயக்கப்படுகிறது. 16 ஏ.சி. பெட்டிகள், நவீன இருக்கைகள், மோதல் தவிர்ப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன வசதிகள் கொண்ட இந்த ரயிலில் 1,128 பேர் பயணிக்கலாம். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 வந்தே பாரத்ரயில்களை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

images 94 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories