இன்று முதல் தென்காசி வழியாக தாம்பரம் -நெல்லை வாராந்திர சிறப்பு ரெயில் மீண்டும் இயக்கம்..

Tamil News large 3061625 2 - 2026

மீன்டும் இன்று முதல் தென்காசி வழியாக தாம்பரம் -நெல்லை வாராந்திர சிறப்பு ரெயில் மீண்டும் இயக்கப்படுகிறது.நேற்றுமுதல் மீண்டும் இயங்கிய நெல்லை தாம்பரம் சிறப்பு ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது .

தீபாவளி, பொங்கல் பண்டிகை, கோடை விடுமுறை ஆகியவற்றை முன்னிட்டு தெற்கு ரெயில்வே சார்பில் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்களுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு இருந்தது. இதில் நெல்லை சந்திப்பில் இருந்து தென்காசி வழியாக தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரெயில்களுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. இதில் நெல்லை -மேட்டுப்பாளையம் ரெயில் மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

அதைப்போல் தற்போது நெல்லை -தாம்பரம்-நெல்லை வாராந்திர சிறப்பு ரெயிலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. நெல்லை சந்திப்பில் இருந்து இந்த ரெயில் நேற்று 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு சென்றது.பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

நெல்லை – தாம்பரம் வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் (06004) 18-ந் தேதி முதல் வருகிற ஜனவரி மாதம் 29-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் தாம்பரம் – நெல்லை வாராந்திர சிறப்பு ரெயில் (06003) தாம்பரத்திலிருந்து இன்று திங்கட்கிழமை முதல் ஜனவரி மாதம் 30-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.40 மணிக்கு நெல்லை வந்து சேரும்.

இந்த சிறப்பு ரெயில்கள் சேரன்மாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு ரெயில் நிறுத்தங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரெயில்கள் தட்கல் கட்டணத்துடன், அதாவது 1.3 மடங்கு அதிக கட்டணத்துடன் இயக்கபட்டாலும் பயணிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த இரு சிறப்பு ரெயில்கள் மூலமாக இந்த 3 மாதங்களில் ரூ.2.5 கோடிக்கும் மேல் வருமானம் கிடைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories