ஆட்டோ ஓட்டுனருக்கு ஓணம் பம்பர் பரிசு ரூ.25 கோடி ..

கேரளாவில் மகனின் உண்டியல் பணத்தில் வாங்கிய லாட்டரி சீட்டில் ஆட்டோ ஓட்டுனருக்கு ஓணம் பம்பர் பரிசு ரூ.25 கோடி பரிசு விழுந்து உள்ளது.

கேரளாவில் 2 ஆண்டுகளுக்கு பின்பு ஓணம் பண்டிகை இந்த ஆண்டு சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஓணம் பம்பர் லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டன. இதில், திருவனந்தபுரம் நகரில் ஸ்ரீவராகம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான அனூப் என்பவருக்கு முதல் பரிசான ரூ.25 கோடி கிடைத்து உள்ளது. 30 வயதில் இந்த பரிசு தொகையை வென்றுள்ள அனூப் கூறும்போது, நான் ஒரு சமையல் கலைஞர். எனக்கு சமைப்பதில் விருப்பம். உணவு விடுதி ஒன்றை தொடங்க வேண்டும் என்பது எனது கனவு. அதனால், சிறிது தொகையை அதில் முதலீடு செய்வேன் என கூறியுள்ளார். இதற்கு முன்பும் அவர் ரூ.5 ஆயிரம் பரிசு தொகையை வென்றிருக்கிறார். இவரது மனைவி மாயா. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார்.

லாட்டரி சீட்டு வாங்க பணம் பற்றாக்குறையாக இருந்துள்ளது என கூறும் அனூப், தனது மகனின் சேமிப்புக்காக வைத்திருந்த உண்டியல் தொகையை கொண்டே பரிசுக்கான லாட்டரி சீட்டை வாங்கினேன் என கூறியுள்ளார்.

அவருக்கு பரிசு கிடைத்ததும் அதுபற்றி செய்தி சேகரிக்க ஊடக துறையினர் அவரை தேடி சென்றுள்ளனர். இதுபற்றி அனூப் கூறும்போது, பரிசு தொகை வென்றது பற்றி முதலில் நம்பவே முடியவில்லை. அதனால், மனைவியிடம் மீண்டும் விவரங்களை ஆய்வு செய்யும்படி கூறினேன். ஒரு குளியல் எடுத்து கொண்டு வந்தேன். முடிவுகளை பார்த்தேன். இன்னும் அந்த பதற்றத்தில் இருந்து வெளிவரவில்லை என அவர் கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் லாட்டரி சீட்டை வாங்கினேன். லாட்டரி ஏஜென்சியில் வேலை செய்யும் எனது சகோதரியிடம் இருந்து சீட்டை வாங்கினேன் என கூறும் அனூப், முதலில் வேறொரு சீட்டை வாங்கினேன். அதன்பின்னர், கடைசி தருணத்தில் பரிசுக்கான இந்த சீட்டை வாங்கினேன். மகிழ்ச்சியாகவும், பதற்றமுடனும் உள்ளது என அவர் கூறியுள்ளார். தனது தந்தை மற்றும் சகோதரி மறைவுக்கு பின்னர் நிதி நெருக்கடியில் சிக்கி போராடி வந்தேன் என்றும் இந்த வெற்றி தனது வாழ்க்கையை மாற்றியுள்ளது என்றும் அவர் கூறுகிறார். அனூப்புக்கு வரி கழிவு போக, ரூ.15.75 கோடி பரிசு தொகை கிடைக்கும். 2-வது பரிசு ரூ.5 கோடி மற்றும் 3-வது பரிசு ரூ.1 கோடியானது தலா 10 வெற்றியாளர்களுக்கு கொடுக்கப்படும்.

image 1 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்

Topics

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்

தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில்

பஞ்சாங்கம் மே 11 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராக ஞாயிறு இன்று பதவி ஏற்று இருக்கிறார் ஜோசப் விஜய். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில்

Entertainment News

Popular Categories