February 22, 2026, 1:37 AM
26.7 C
Chennai

ஆட்டோ ஓட்டுனருக்கு ஓணம் பம்பர் பரிசு ரூ.25 கோடி ..

கேரளாவில் மகனின் உண்டியல் பணத்தில் வாங்கிய லாட்டரி சீட்டில் ஆட்டோ ஓட்டுனருக்கு ஓணம் பம்பர் பரிசு ரூ.25 கோடி பரிசு விழுந்து உள்ளது.

கேரளாவில் 2 ஆண்டுகளுக்கு பின்பு ஓணம் பண்டிகை இந்த ஆண்டு சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஓணம் பம்பர் லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டன. இதில், திருவனந்தபுரம் நகரில் ஸ்ரீவராகம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான அனூப் என்பவருக்கு முதல் பரிசான ரூ.25 கோடி கிடைத்து உள்ளது. 30 வயதில் இந்த பரிசு தொகையை வென்றுள்ள அனூப் கூறும்போது, நான் ஒரு சமையல் கலைஞர். எனக்கு சமைப்பதில் விருப்பம். உணவு விடுதி ஒன்றை தொடங்க வேண்டும் என்பது எனது கனவு. அதனால், சிறிது தொகையை அதில் முதலீடு செய்வேன் என கூறியுள்ளார். இதற்கு முன்பும் அவர் ரூ.5 ஆயிரம் பரிசு தொகையை வென்றிருக்கிறார். இவரது மனைவி மாயா. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார்.

லாட்டரி சீட்டு வாங்க பணம் பற்றாக்குறையாக இருந்துள்ளது என கூறும் அனூப், தனது மகனின் சேமிப்புக்காக வைத்திருந்த உண்டியல் தொகையை கொண்டே பரிசுக்கான லாட்டரி சீட்டை வாங்கினேன் என கூறியுள்ளார்.

அவருக்கு பரிசு கிடைத்ததும் அதுபற்றி செய்தி சேகரிக்க ஊடக துறையினர் அவரை தேடி சென்றுள்ளனர். இதுபற்றி அனூப் கூறும்போது, பரிசு தொகை வென்றது பற்றி முதலில் நம்பவே முடியவில்லை. அதனால், மனைவியிடம் மீண்டும் விவரங்களை ஆய்வு செய்யும்படி கூறினேன். ஒரு குளியல் எடுத்து கொண்டு வந்தேன். முடிவுகளை பார்த்தேன். இன்னும் அந்த பதற்றத்தில் இருந்து வெளிவரவில்லை என அவர் கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் லாட்டரி சீட்டை வாங்கினேன். லாட்டரி ஏஜென்சியில் வேலை செய்யும் எனது சகோதரியிடம் இருந்து சீட்டை வாங்கினேன் என கூறும் அனூப், முதலில் வேறொரு சீட்டை வாங்கினேன். அதன்பின்னர், கடைசி தருணத்தில் பரிசுக்கான இந்த சீட்டை வாங்கினேன். மகிழ்ச்சியாகவும், பதற்றமுடனும் உள்ளது என அவர் கூறியுள்ளார். தனது தந்தை மற்றும் சகோதரி மறைவுக்கு பின்னர் நிதி நெருக்கடியில் சிக்கி போராடி வந்தேன் என்றும் இந்த வெற்றி தனது வாழ்க்கையை மாற்றியுள்ளது என்றும் அவர் கூறுகிறார். அனூப்புக்கு வரி கழிவு போக, ரூ.15.75 கோடி பரிசு தொகை கிடைக்கும். 2-வது பரிசு ரூ.5 கோடி மற்றும் 3-வது பரிசு ரூ.1 கோடியானது தலா 10 வெற்றியாளர்களுக்கு கொடுக்கப்படும்.

image 1 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories