February 11, 2025, 6:55 AM
23.3 C
Chennai

சிவகாசி தாலுகா சர்வேயர் பிரிவில் புரோக்கர்கள் ஆதிக்கம்..

சிவகாசி தாலுகா அலுவலக சர்வேயர் பிரிவில்
புரோக்கர்கள் ஆதிக்கம் அதிகரித்தது வருவதாக புகார் தெரிவிக்கும் மக்கள்
மாவட்ட நிர்வாகம் தலையிட கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

சிவகாசி தாலுகா அலுவலகத்தில் இயங்கும் சர்வேயர் பிரிவில் புரோக்கர்கள் ஆதிக்கம் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அதிமுக ஆதரவு பணியாளர்களை உடனடியாக பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி்க்கை எழுந்துள்ளது.

சிவகாசி தாலுகா அலுவலகத்தில் சர்வேயர் பிரிவு இயங்கி வருகின்றது. இங்கு வீட்டுமனை பட்டா, நில பட்டா, பட்டா பெயர் மாற்றம் பெற தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பட்டா பெறுவதற்கு, பத்திரத்தின் நகல், மூலப்பத்திரம், வில்லங்கச்சான்று, வீட்டுவரி ரசீது, நிலமாக இருந்தால் நிலவரி ரசீது ஆகியவற்றை ஸ்கேன் செய்து, தாலுகா அலுவலகத்தின் வாயிலாக, பொது இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கின்றனர். ஆனால் சாதாரண நடுத்தர பொதுமக்கள் எளிதாக பட்டா பெற முடியாத நிலை இருக்கின்றது. பட்டா பெறுவதற்கு, மக்களும் விவசாயிகளும் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். .பட்டா கேட்டு தாலுகா அலுவலகத்துக்கு செல்வோர், இ-சேவை மையத்தில், சுயமாக விண்ணப்பிப்பதற்கு முயற்சிப்பவர்கள் என்று யாராக இருந்தாலும், அவர்கள் புரோக்கர்களின் மூலம் சென்றால் எளிதாக பட்டா வாங்க முடியும் என்ற சூழ்நிலை நிலவுகின்றது. குறிப்பாக இந்த சர்வேயர் பிரிவில் பணிபுரியும் சில பணியாளர்கள் 3 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் அப்போது ஆட்சியாளர்களால் ஆசியோடு வந்தவர்கள். எனவே இப்போதும் அதிமுக புரோக்கர்களின் ஆதிக்கமே நீடிக்கின்றது. சர்வேயர் பிரிவில் அதிமுக வேஷ்டி கட்டிய புரோக்கர்களை அதிகமாக காணமுடிகின்றது. இந்த புரோக்கர்களை பிடித்தால் மட்டுமே எளிதாக பட்டா வாங்க முடியும் என்ற நிலை உள்ளது. 3 வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்கள், அதிமுக ஆதரவு ஊழியர்களை அடையாளம் கண்டு உடனடியாக பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறும்போது, சிறுகச் சிறுக பணம் சேர்த்து ஒரு வீட்டு மனை வாங்கினால், அதற்குப் பட்டா மாற்றம் பெற முடியவில்லை. குடும்பச் சொத்தைப் பாகப்பிரிவினை செய்தாலும் உரியவர்களுக்கு முறையாகப் பட்டா கிடைப்பதில்லை. சர்வேயர் பிரிவில் புரோக்கர்களுக்கு மட்டுமே வேலை நடக்கின்றது. பட்டா பெற முடியாமல் 20திற்கும் மேற்பட்ட மக்கள் என்னிடமே புகார் தெரிவித்துள்ளனர். பட்டா கேட்டு தினமும் 50திற்கும் மேற்பட்டோர் சிவகாசி சர்வேயர் பிரிவிற்கு வருடக்கணக்கில் அலைந்து வருகின்றனர். பொதுமக்களை அலக்கழிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். பூவநாதபுரம், திருத்தங்கல் கண்ணகி காலனி் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இந்த பட்டாவை அரசின் கிராம நிர்வாக கணக்கில் சேர்க்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதி மக்கள் மின் இணைப்பு, ரேசன் கார்டு உட்பட பல்வேறு அரசின் திட்டங்களை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சிவகாசி பகுதி மக்களுக்கு புரோக்கர்கள் தலையீடு இன்றி எளிதாக பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

Topics

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Ind Vs Eng ODI: ரோஹித் சர்மா அதிரடியில் இந்தியா வெற்றி!

ஆட்ட நாயகனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியுடன் இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

Entertainment News

Popular Categories