தென்மாவட்ட பயணிகள் ஷாக்; செங்கோட்டை -மதுரை ரயில் மீண்டும் ரத்து முக்கிய ரயில்கள் நேரம் மாற்றம்!

டிதென்மாவட்ட பயணிகளுக்கு செம ஷாக்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

images 8 - 2026
IMG 20221104 WA0136 - 2026

தென் மாவட்டப் பயணிகள் செம ஷாக் முக்கிய ரயில்கள் ரத்து..நேரம் மாற்றம்.தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது

தென்மாவட்ட பயணிகளுக்கு செம ஷாக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ரயில் பாதையில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணி காரணமாக நவம்பர் 7 முதல் 12ம் தேதி வரை மதுரை – செங்கோட்டை இடையிலான ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

அதேப்போன்று மதுரை – விழுப்புரம் விரைவு ரயில் நவம்பர் 8, நவம்பர் 10 முதல் 12 மற்றும் நவம்பர் 28 முதல் 30 வரை மதுரை – திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் பாலக்காடு – திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில், நவம்பர் 18, 19, 21, 22 நாட்களில் கோவில்பட்டி -திருச்செந்தூர் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

மேலும் கோவை – நாகர்கோவில் இயக்கப்படும் விரைவு ரயில், சென்னை – குருவாயூர் விரைவு ரயில் நவம்பர் 22, 25, 26ம் தேதிகளில் தாமதமாக நெல்லை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் நவம்பர் 30ம் தேதி மதுரை – செகந்திராபாத் சிறப்பு ரயில் 45 நிமிடங்கள் தாமதமாக காலை 6.15 மணிக்கு புறப்படும். நவ.22, 25, 26ல் வாஞ்சி மணியாச்சியில் தூத்துக்குடிக்கு இணைப்பு ரயில் சேவை கிடையாது.

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி மற்றும் நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு காலை 7.10 மணிக்கு உடுமலை ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும். இந்த ரயிலில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் மற்றும் தென்மாவட்டங்கள் நோக்கி செல்லும் பயணிகள் கூட்டம் இந்த ரயிலில் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் ரயில் பாதை பராமரிப்பு பணிகளுக்காக, திருச்செந்தூர் செல்லும் ரயில் வருகின்ற 18,19 மற்றும் 21, 22 ஆகிய தேதிகளில் கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories