ஆனைக்குட்டம் அணை-ஷட்டர்கள் பழுதால் வெளியேறி வீணாகும் தண்ணீர்..

IMG 20221105 WA0052 - 2026


சிவகாசி பகுதியில் பெய்த மழையால் ஆனைக்குட்டம் அணைக்கு 14
அடிக்கு தண்ணீர் வந்தும், மதகுகளில் ஷட்டர்கள் பழுதால் தண்ணீர் வெளியேறி வீணாகிறது.
சிவகாசி ஆனைக்குட்டத்தில் 1989 ல் ஆனைக்குட்டம் அணை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அணையில் 9 மதகுகள் உள்ளது.
இந்த அணைக்கு, எவ்வளவு மழை பெய்தாலும் நேரடியாக தண்ணீர் வந்து தேங்கியது இல்லை. ஆனால் பிளவக்கல் அணை நிரம்பினால் அதன் உபரி நீர், பல்வேறு கண்மாய்களை நிரம்பி
ஆனைக்குட்டம் அணைக்கு வரும். இந்த அனை தற்போது, பாசன வசதியை விட குடிநீர் ஆதாரமாக அதிகளவில் பயன்படுகின்றது.

IMG 20221105 WA0049 - 2026

விருதுநகரின் குடிநீர் ஆதாரமே இந்த அணைதான் . தவிர அணையைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம், குடிநீர் தேவைக்கு போர்வெல் அமைப்பதற்கு நீர் ஆதாரமாக பயன்படுகின்றது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையினால் அணைக்கு 14 அடி வரைக்கும் தண்ணீர் வந்துள்ளது. அணை 2006 ம் ஆண்டு முழுவதுமாக நிரம்பியது. அதன் பின்னர் இப்பொழுது வரையும் முழுமையாக நிரம்பியது இல்லை. ஆனாலும் பாதியளவு தண்ணீர் வந்தாலும் ஷட்டர் பழுதால் தண்ணீர் வெளியேறி வீணாக சென்றுவிடும். இதனால் எப்பொழுதுமே அணையில் இருக்கின்ற தண்ணீரை தேக்க முடியவில்லை. 2020 ல் ஷட்டரில் தற்காலிகமாக பழுது பார்க்கப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த ஆண்டில் அணையில் முழுமையாக தண்ணீர் வந்தும் அணை பலவீனமாக இருந்ததால் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழைக்கு அணையில் 14 அடிக்கு தண்ணீர் வந்துள்ளது. ஆனால் இங்குள்ள மூன்று மதகுகளில் ஷட்டர்கள் பழுதால் தண்ணீர் வெளியேறி வீணாகிறது.
சுந்தரலட்சுமி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர், விருதுநகர், அணையில் மூன்று மதகுகளில் ஷட்டர் பழுதால் தண்ணீர் கசிந்து வெளியேறுகின்றது. எனவே துாத்துக்குடியில் இருந்து முத்துக்குளிப்பு நபர்களை வரவழைத்து ஷட்டரில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, தண்ணீர் வெளியேறுவது நிறுத்தப்படும்.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!
IMG 20221105 WA0050 - 2026
IMG 20221105 WA0051 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories