December 6, 2025, 5:50 AM
24.9 C
Chennai

திறந்தவெளி கிணற்றில் தவறி விழுந்து பலியான சிங்கங்கள்..

images 2023 01 08T063236.057 - 2025

குஜராத் மாநிலத்தில் திறந்தவெளி கிணற்றில் தவறி விழுந்த ஆண் பெண் இரு சிங்கங்கள் நீரில் மூழ்கிய பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தின் கிர் வனப்பகுதியில் திறந்தவெளி கிணற்றில் தவறி விழுந்த ஆண், பெண் சிங்கங்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கிர் (கிழக்கு) இணை வனப்பாதுகாவலர் ராஜ்தீப்சிங் ஜாலா கூறியதாவது: “சுமார் ஐந்து முதல் ஒன்பது வயது மதிக்கத்தக்க இரண்டு சிங்கங்கள் வெள்ளிக்கிழமை காலையில் கம்பா தாலுகா, கேடா கிராமத்தின் அருகில் ஒரு சுற்றித் திரிந்த போது விவசாயி கிணற்றின் விழுந்துள்ளன. இதுகுறித்து கேள்விப்பட்ட உடனேயே அந்த விவசாயி எங்களுக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையின் மீட்பு குழுவினர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போது சிங்கங்கள் இரண்டும் நீரில் மூழ்கி இறந்திருந்தன. சிங்கங்களின் உடல்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன” என்றார்.

“திறந்த வெளி கிணறுகளில் சிங்கங்கள் விழுந்து உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில், கடந்த 2007 – 08 ஆண்டுகளில் அம்ரேலி மற்றும் கிர் சோம்நாத் மாவட்டங்களில் உள்ளடக்கிய கிர் வனப்பகுதியின் கிழக்கு பகுதியில் உள்ள 11,748 கிணறுகள் ‘பாராபெட்’ மூலம் மூடப்பட்டன. அவற்றில் அம்ரேலியில் 8,962 கிணறுகளும், கிர் சோம்நாத் பகுதியில் 2,782 கிணறுகளும் மூடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் எங்கள் வனச்சரகப்பகுதியில் மூடப்பட்டவை மட்டுமே. ஆனாலும் புதிய கிணறுகள் தோண்டப்பட்டுக்கொண்டே இருப்பதால் இது ஒரு தொடர் நிகழ்வாகவே இருக்கிறது” என்று வனக்காவல் அதிகாரி தெரிவித்தார்.

இதற்கிடையில், கடந்த மார்ச் மாதம் நடந்த மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தில் அப்போதைய வனத்துறை அமைச்சர் கேள்வி ஒன்றிற்கு அளித்த பதிலில் கடந்த 2021 வரையிலான இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 283 சிங்கள்கள் உயிரிழந்துள்ளன. இதில், 21 சிங்கங்கள் கிணறுகளில் விழுந்தும், ரயில், வாகனங்களில் அடிபட்டும் இயற்கைக்கு மாறான முறையில் உயிரிழந்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories