இந்தியா முழுவதும் 259 ரெயில்கள் இன்று ரத்து..

1012308 chennai 16 1 - 2026

இந்தியா முழுவதும் 259 ரெயில்கள் இன்று ரத்து; ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பராமரிப்பு பணி, தெளிவற்ற வானிலை உள்ளிட்ட காரணங்களுக்காக 259 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகின்றன என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

வடஇந்தியாவில் அடர்பனியால் வாகனங்கள், ரெயில், விமான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லி விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. டெல்லி விமான நிலையத்தில் இன்று 20 விமானங்கள் காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன. இதேபோன்று ரெயில் போக்குவரத்தும் பாதிப்படைந்து உள்ளது. இந்த நிலையில், ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் 259 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகின்றன என அறிவித்து உள்ளது.

ரெயில்வே தண்டவாளங்களில் பராமரிப்பு மற்றும் இயக்க பணிகளுக்காக இந்த ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன. இதுதவிர, வடக்கு ரெயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் தெளிவற்ற வானிலை உள்ளிட்ட காரணங்களுக்காகவும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. 42 ரெயில்கள் சென்று சேரும் இடங்கள் மாற்றப்பட்டு உள்ளன. 42 ரெயில்களின் பயண தொலைவு குறைக்கப்பட்டு உள்ளது.

34 ரெயில்களின் பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. 20 ரெயில்களின் போக்குவரத்து திசைமாற்றி விடப்பட்டு உள்ளது என்றும் அறிவிப்பு வெளிவந்து உள்ளது. இதனால், கோரக்பூர், லக்னோ, கோட்டயம், கொல்கத்தா, சூரத், உதய்ப்பூர், ஷாலிமர், அமராவதி, பதன்கோட், பல்வால் உள்ளிட்ட பல நகரங்கள் பாதிக்கப்பட கூடும். ரெயில் பயணிகளும் இந்திய ரெயில்வேக்கான என்.டி.இ.எஸ். எனப்படும் வலைதளத்தில் சென்று ரெயில்களின் நிலை பற்றி அறிந்து கொள்ள ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதனால், பயணிகளின் முன்பதிவு உடனடியாக ரத்து செய்யப்பட்டு, பயனாளர்களின் கணக்குகளுக்கு பணம் விரைவில் திருப்பி செலுத்தப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories