திருமலை-ஒருநாள் அன்ன பிரசாதம் வழங்க ரூ33 லட்சம் நன்கொடை..

1719060 tirupatitemple - 2026

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒருநாளுக்கு அன்ன பிரசாதம் வழங்க ரூ33 லட்சம் நன்கொடையாக வழங்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கும் ஒருநாள் நன்கொடை திட்டத்தை, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்வி அன்ன பிரசாத அறக்கட்டளையை ஏற்கனவே தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒருநாளுக்கு அன்ன பிரசாதம் வழங்க ரூ33 லட்சம் நன்கொடையாக வழங்கலாம்.

இந்த ெதாகையில் காலை உணவுக்கு ரூ7.70 லட்சமும், மதிய உணவுக்கு ரூ12.65 லட்சமும், இரவு உணவிற்கு ரூ12.65 லட்சமும் பயன்படுத்தப்படும். நன்கொடை வழங்குபவர்கள் தாங்களாகவே பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கலாம். தானம் செய்யும் நன்கொடையாளரின் பெயர் வெங்கமாம்பா அன்ன பிரசாத கட்டிடத்தில் டிஜிட்டல் திரையில் வைக்கப்படும். பிரமோற்சவத்தில் கருட சேவை, ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி, ரதசப்தமி ஆகிய முக்கிய உற்சவ நாட்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தேவஸ்தானம் அன்ன பிரசாதம் வழங்குகிறது. திருமலையில் உள்ள மாத்ரு தரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத கட்டிடத்தில் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை சட்னியுடன் உப்புமா, பொங்கல் மற்றும் சேமியா உப்புமா வழங்கப்படுகிறது.

காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரையும், மீண்டும் மாலை 5 மணி முதல் இரவு 10.30 மணி வரை பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், சட்னி, சாதம், சாம்பார், ரசம், மோர் வழங்கப்படுகிறது. திருமலையில் ஒரு நாளைக்கு 14 முதல் 16.5 டன் அரிசியும், 6.5 முதல் 7.5 டன் காய்கறிகள் கொண்டு அன்ன பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. தேவஸ்தானம் பக்தர்களுக்கு செய்து வரும் அன்னதான திட்டத்தில் பக்தர்களும் தங்களின் பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு ஒரு நாள் அன்ன பிரசாதம் வழங்க நன்கொடை செலுத்தி பயன்பெறலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories