December 11, 2025, 9:58 PM
25.5 C
Chennai

திருமலை-ஒருநாள் அன்ன பிரசாதம் வழங்க ரூ33 லட்சம் நன்கொடை..

1719060 tirupatitemple - 2025

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒருநாளுக்கு அன்ன பிரசாதம் வழங்க ரூ33 லட்சம் நன்கொடையாக வழங்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கும் ஒருநாள் நன்கொடை திட்டத்தை, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்வி அன்ன பிரசாத அறக்கட்டளையை ஏற்கனவே தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒருநாளுக்கு அன்ன பிரசாதம் வழங்க ரூ33 லட்சம் நன்கொடையாக வழங்கலாம்.

இந்த ெதாகையில் காலை உணவுக்கு ரூ7.70 லட்சமும், மதிய உணவுக்கு ரூ12.65 லட்சமும், இரவு உணவிற்கு ரூ12.65 லட்சமும் பயன்படுத்தப்படும். நன்கொடை வழங்குபவர்கள் தாங்களாகவே பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கலாம். தானம் செய்யும் நன்கொடையாளரின் பெயர் வெங்கமாம்பா அன்ன பிரசாத கட்டிடத்தில் டிஜிட்டல் திரையில் வைக்கப்படும். பிரமோற்சவத்தில் கருட சேவை, ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி, ரதசப்தமி ஆகிய முக்கிய உற்சவ நாட்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தேவஸ்தானம் அன்ன பிரசாதம் வழங்குகிறது. திருமலையில் உள்ள மாத்ரு தரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத கட்டிடத்தில் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை சட்னியுடன் உப்புமா, பொங்கல் மற்றும் சேமியா உப்புமா வழங்கப்படுகிறது.

காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரையும், மீண்டும் மாலை 5 மணி முதல் இரவு 10.30 மணி வரை பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், சட்னி, சாதம், சாம்பார், ரசம், மோர் வழங்கப்படுகிறது. திருமலையில் ஒரு நாளைக்கு 14 முதல் 16.5 டன் அரிசியும், 6.5 முதல் 7.5 டன் காய்கறிகள் கொண்டு அன்ன பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. தேவஸ்தானம் பக்தர்களுக்கு செய்து வரும் அன்னதான திட்டத்தில் பக்தர்களும் தங்களின் பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு ஒரு நாள் அன்ன பிரசாதம் வழங்க நன்கொடை செலுத்தி பயன்பெறலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

Topics

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

நீதியரசர்களுக்கு மிரட்டல்; நீதித் துறையை இழிவுபடுத்தும் திமுக.,!

நீதியரசர்களுக்கு மிரட்டல் விடுக்கும் நோக்கமா? நீதித்துறையை இழிவுபடுத்தும் திமுக.,வை இந்துமுன்னணி வன்மையாகக்...

பஞ்சாங்கம் டிச.11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நீதிபதியுடன் அரசியல் செய்து, திமுக., தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளது!

ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றவர்கள்,நீதிபதி மீது...

Entertainment News

Popular Categories