திருமலை-ஒருநாள் அன்ன பிரசாதம் வழங்க ரூ33 லட்சம் நன்கொடை..

1719060 tirupatitemple - 2026

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒருநாளுக்கு அன்ன பிரசாதம் வழங்க ரூ33 லட்சம் நன்கொடையாக வழங்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கும் ஒருநாள் நன்கொடை திட்டத்தை, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்வி அன்ன பிரசாத அறக்கட்டளையை ஏற்கனவே தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒருநாளுக்கு அன்ன பிரசாதம் வழங்க ரூ33 லட்சம் நன்கொடையாக வழங்கலாம்.

இந்த ெதாகையில் காலை உணவுக்கு ரூ7.70 லட்சமும், மதிய உணவுக்கு ரூ12.65 லட்சமும், இரவு உணவிற்கு ரூ12.65 லட்சமும் பயன்படுத்தப்படும். நன்கொடை வழங்குபவர்கள் தாங்களாகவே பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கலாம். தானம் செய்யும் நன்கொடையாளரின் பெயர் வெங்கமாம்பா அன்ன பிரசாத கட்டிடத்தில் டிஜிட்டல் திரையில் வைக்கப்படும். பிரமோற்சவத்தில் கருட சேவை, ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி, ரதசப்தமி ஆகிய முக்கிய உற்சவ நாட்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தேவஸ்தானம் அன்ன பிரசாதம் வழங்குகிறது. திருமலையில் உள்ள மாத்ரு தரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத கட்டிடத்தில் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை சட்னியுடன் உப்புமா, பொங்கல் மற்றும் சேமியா உப்புமா வழங்கப்படுகிறது.

காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரையும், மீண்டும் மாலை 5 மணி முதல் இரவு 10.30 மணி வரை பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், சட்னி, சாதம், சாம்பார், ரசம், மோர் வழங்கப்படுகிறது. திருமலையில் ஒரு நாளைக்கு 14 முதல் 16.5 டன் அரிசியும், 6.5 முதல் 7.5 டன் காய்கறிகள் கொண்டு அன்ன பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. தேவஸ்தானம் பக்தர்களுக்கு செய்து வரும் அன்னதான திட்டத்தில் பக்தர்களும் தங்களின் பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு ஒரு நாள் அன்ன பிரசாதம் வழங்க நன்கொடை செலுத்தி பயன்பெறலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories