February 22, 2026, 9:17 AM
26.1 C
Chennai

ஒரே வீட்டை 3 பேருக்கு விற்பனை செய்ததால் பரபரப்பு..

images 78 2 - 2026

மத்திய பிரதேசத்தில் ஒரே வீட்டை 3 பேருக்கு பல லட்சங்களுக்கு ஒருவர் விற்றதுடன், புகாரளித்த நபரையே போலீசார் கைது செய்த அவலம் நடந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் சங்கர்பாக் காலனியில் வசித்து வருபவர் தர்மேந்திரா பெமால். இவர், ஜெகதீஷ் யோகி என்பவரிடம் வீடு ஒன்றை ரூ.11 லட்சம் கொடுத்து முன்பதிவு செய்துள்ளார். மீத தொகையையும் பின்னர் கொடுத்து உள்ளார். ஆனால், வீட்டை இவரிடம் யோகி கொடுக்கவில்லை. இதனால், போலீசில் அவர் புகார் அளித்து உள்ளார். ஆனால், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

விவகாரம் இத்துடன் முடியவில்லை. ஜெயசிங் நாயக் என்பவருக்கும் யோகி வீட்டை விற்றுள்ளார் என்ற விவரம் பின்னரே தர்மேந்திராவுக்கு தெரிய வந்துள்ளது. அவரும், வீட்டை தன்னிடம் ஒப்படைக்கவில்லை என போலீசில் இதேபோன்ற புகார் ஒன்றை அளித்து உள்ளார். தொடர்ந்து, தர்மேந்திரா இந்த வழக்கில் தீவிரம் காட்ட, யோகிக்கு சதார் பஜார் காவல் நிலையத்தின் காவல் அதிகாரி ஒருவர் துணை போனது தெரிய வந்தது. அவருக்கு யோகி லஞ்சம் கொடுத்து உள்ளார். இதனால், இதனை கண்டும் காணாமல் அவர் இருந்து வந்துள்ளார். இந்த விவகாரத்தில் யோகி, வீட்டை சுனில் ராஜ்பகதூர் என்பவருக்கும் விற்றுள்ளது தெரிந்து தர்மேந்திரா அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

இதுபற்றி அவர் போலீசில் புகார் அளித்தது பற்றி அறிந்த யோகி, பதிலுக்கு போலீசில் புகார் அளித்திருக்கிறார். ஆச்சரியப்படும் வகையில், போலீசார் அதன்பேரில் நடவடிக்கை எடுத்து தர்மேந்திராவை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். இதன்பின், போலீஸ் காவலில் இருந்து வெளியே வந்த தர்மேந்திரா, நேராக யோகியை சென்று பார்த்து உள்ளார்.

ஆனால், அவரை யோகி மிரட்டியுள்ளார். உன்னுடைய புகாருக்கு எந்த பலனும் இருக்காது என்று மிரட்டியும் இருக்கிறார். ஒரே வீட்டை 3 பேருக்கு பல லட்சங்களுக்கு ஒருவர் விற்றதுடன், அதனால் பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகாரளித்தும், அவரையே போலீசார் கைது செய்த அவலம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories