ஒரே வீட்டை 3 பேருக்கு விற்பனை செய்ததால் பரபரப்பு..

images 78 2 - 2026

மத்திய பிரதேசத்தில் ஒரே வீட்டை 3 பேருக்கு பல லட்சங்களுக்கு ஒருவர் விற்றதுடன், புகாரளித்த நபரையே போலீசார் கைது செய்த அவலம் நடந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் சங்கர்பாக் காலனியில் வசித்து வருபவர் தர்மேந்திரா பெமால். இவர், ஜெகதீஷ் யோகி என்பவரிடம் வீடு ஒன்றை ரூ.11 லட்சம் கொடுத்து முன்பதிவு செய்துள்ளார். மீத தொகையையும் பின்னர் கொடுத்து உள்ளார். ஆனால், வீட்டை இவரிடம் யோகி கொடுக்கவில்லை. இதனால், போலீசில் அவர் புகார் அளித்து உள்ளார். ஆனால், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

விவகாரம் இத்துடன் முடியவில்லை. ஜெயசிங் நாயக் என்பவருக்கும் யோகி வீட்டை விற்றுள்ளார் என்ற விவரம் பின்னரே தர்மேந்திராவுக்கு தெரிய வந்துள்ளது. அவரும், வீட்டை தன்னிடம் ஒப்படைக்கவில்லை என போலீசில் இதேபோன்ற புகார் ஒன்றை அளித்து உள்ளார். தொடர்ந்து, தர்மேந்திரா இந்த வழக்கில் தீவிரம் காட்ட, யோகிக்கு சதார் பஜார் காவல் நிலையத்தின் காவல் அதிகாரி ஒருவர் துணை போனது தெரிய வந்தது. அவருக்கு யோகி லஞ்சம் கொடுத்து உள்ளார். இதனால், இதனை கண்டும் காணாமல் அவர் இருந்து வந்துள்ளார். இந்த விவகாரத்தில் யோகி, வீட்டை சுனில் ராஜ்பகதூர் என்பவருக்கும் விற்றுள்ளது தெரிந்து தர்மேந்திரா அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

இதுபற்றி அவர் போலீசில் புகார் அளித்தது பற்றி அறிந்த யோகி, பதிலுக்கு போலீசில் புகார் அளித்திருக்கிறார். ஆச்சரியப்படும் வகையில், போலீசார் அதன்பேரில் நடவடிக்கை எடுத்து தர்மேந்திராவை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். இதன்பின், போலீஸ் காவலில் இருந்து வெளியே வந்த தர்மேந்திரா, நேராக யோகியை சென்று பார்த்து உள்ளார்.

ஆனால், அவரை யோகி மிரட்டியுள்ளார். உன்னுடைய புகாருக்கு எந்த பலனும் இருக்காது என்று மிரட்டியும் இருக்கிறார். ஒரே வீட்டை 3 பேருக்கு பல லட்சங்களுக்கு ஒருவர் விற்றதுடன், அதனால் பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகாரளித்தும், அவரையே போலீசார் கைது செய்த அவலம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories