June 18, 2025, 7:27 AM
29.6 C
Chennai

ஜனாதிபதி மாளிகையில் புகழ்பெற்ற ‘முகலாய’ தோட்டத்தின் பெயர் மாற்றம்..

images 2023 01 29T102414.830

டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள புகழ்பெற்ற ‘முகலாய’ தோட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் உள்ள ‘முகல்’ கார்டன் எனப்படும் புகழ் பெற்ற முகலாய தோட்டம் “அம்ரித் உதயன்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், அதன் அமிர்தகால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜனாதிபதி மாளிகையில் உள்ள மொகலாயர் தோட்டம் என அறியப்பட்டும் தோட்டத்திற்கு “அமிரித் உத்யன்” என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு பெயர்சூட்டி உள்ளார். இந்தத் தோட்டம் பொதுமக்களின் பார்வைக்காக ஞாயிற்றுக்கிழமைகளிலும் திறந்திருக்கும். மேலும், இந்த முறை ஜன.31 முதல் மார்ச் 26 வரை இரண்டு மாதங்களுக்கு திறந்திருக்கும் என்றும் இவை தவிர, மாற்றுத் திறனாளிகள், விவசாயிகள், பெண்களுக்காக சில நாட்கள் பிரத்யோகமாக ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகையின் இணைய தளத்திலும் அம்ரித் உத்யன் பற்றி கூறப்பட்டிருப்பதாவது:- சுமார் 15 ஏக்கர் விரிந்து பரவியிருக்கும் அம்ரித் உத்யன், அடிக்கடி ஜனாதிபதி மாளிகையின் ஆன்மாவாக சித்தரிக்கப்படுகின்றது. அம்ரித் உத்யன் தோட்டம், ஜம்மு காஷ்மீரில் உள்ள முகலாயர் தோட்டம், தாஜ்மஹாலை சுற்றியுள்ள தோட்டங்கள், பெர்ஷியாவின் மினியேச்சர் ஓவியங்களின் தாக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

கடந்த 1927-ம் ஆண்டு தொடக்கத்தில் சர் எட்வின் லுட்யின்ஸ் அம்ரித் உத்யன் தோட்டத்தின் வடிவத்தை இறுதி செய்தார். ஆனாலும், 1928 – 29 காலக்கட்டங்களில் தான் தோட்டம் உருவாக்கப்பட்டது. லுட்யின் தோட்டக்கலை நிபுணர் வில்லியம் முஸ்டோனுடன் இணைந்து இதனை உருவாக்கியது இதன் மற்றொரு சிறப்பு. இந்திய மற்றும் மேற்கத்திய கட்டிடகலை பாணிகள் கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் ராஷ்டிரபதி பவன் கட்டிடம் போலவே, லுட்யின்ஸ் இந்தத் தோட்டத்தையும் முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் பாணிகளை இணைத்து உருவாக்கினார்.

முகலாயர் பாணி கால்வாய்கள், மேல்தளங்கள் பூக்கள் அடந்த புதர்கள் போன்றவை, ஆங்கிலேயர் பாணி மலர் படுக்கைகள், புல்வெளிகள், தனியார் ஹெட்ஜ்களுடன் அழகாக ஒன்று கலந்து உருவாக்கப்பட்டிருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 17- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

கரூர் மாவட்ட பாரதீய வரலாற்றுத் தொகுப்புப் பேரவை புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு

தில்லி 'பாரதீய வரலாற்றுத் தொகுப்புப் பேரவை' கரூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் தலைமை உரை ஆற்றுகிறார் கரூர் மாவட்ட கௌரவ தலைவர் வள்ளுவர் செங்குட்டுவன். அருகில் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் முனைவர் ராமசுப்பிரமணியன், மாநில அமைப்புச் செயலாளர் கதிரவன், திருப்பூர் கோட்ட செயலாளர் பேராசிரியர் மாரிமுத்து, கரூர் மாவட்ட பொதுச் செயலாளர் மருத்துவர் இன்ப பிரபஞ்சன், துணைத் தலைவர் முனைவர். ஸ்ரீ பாலசுப்பிரமணியன், இணைச் செயலாளர்கள் மைதிலி, குளித்தலை சுந்தர் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள்.

இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிப்பதே பிரச்னைகளுக்கு தீர்வு!

இந்திய மக்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடும் அதுவே!

பஞ்சாங்கம் ஜூன் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 17- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

கரூர் மாவட்ட பாரதீய வரலாற்றுத் தொகுப்புப் பேரவை புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு

தில்லி 'பாரதீய வரலாற்றுத் தொகுப்புப் பேரவை' கரூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் தலைமை உரை ஆற்றுகிறார் கரூர் மாவட்ட கௌரவ தலைவர் வள்ளுவர் செங்குட்டுவன். அருகில் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் முனைவர் ராமசுப்பிரமணியன், மாநில அமைப்புச் செயலாளர் கதிரவன், திருப்பூர் கோட்ட செயலாளர் பேராசிரியர் மாரிமுத்து, கரூர் மாவட்ட பொதுச் செயலாளர் மருத்துவர் இன்ப பிரபஞ்சன், துணைத் தலைவர் முனைவர். ஸ்ரீ பாலசுப்பிரமணியன், இணைச் செயலாளர்கள் மைதிலி, குளித்தலை சுந்தர் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள்.

இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிப்பதே பிரச்னைகளுக்கு தீர்வு!

இந்திய மக்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடும் அதுவே!

பஞ்சாங்கம் ஜூன் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மதுரை – செங்கோட்டை இடையே இரவு நேர ரயில் தேவை!

எனவே இந்த புதிய (மதுரை- தென்காசி -மதுரை) இரவு நேர ரயில் இயக்கினால் நல்லது.

பஞ்சாங்கம் ஜூன்15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

சபரிமலை வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. பம்பை நதியில் தண்ணீர் அதிகம் செல்கிறது

Entertainment News

Popular Categories