
கர்நாடகா மாநிலத்தில் திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி
அதுபோல் கர்நாடகத்தில் மண்டியா, மைசூரு, கோலார் பகுதிகளில் வாலிபர்கள், பட்டதாரிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் விவசாயம் செய்வதால் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. சமீபத்தில் மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டையில் ஆதிசுஞ்சனகிரி மடம் சார்பில் ஒக்கலிக சமுதாய மாநாடு நடந்தது. இதில் ஜாதக பரிவர்த்தனை நிகழ்ச்சி நடந்தது. இதில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான வாலிபர்கள் மணப்பெண்ணை தேடி முன்பதிவு செய்திருந்தனர்.

ஆனால் சுமார் 800 பெண்கள் மட்டுமே இதில் பங்கேற்றனர். இதனால் சுமார் 24 ஆயிரம் பேர் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். இன்றைய பெண்கள், சம்பளம் அதிகம் வாங்கும் நபரை தனது வாழ்க்கை துணையாக தேடுவதாகவும், இதனால் தங்களுக்கு பெண் கிடைக்காமல் சிக்கல் நீடிப்பதாகவும் கூறினர். அதுமட்டுமல்லாமல் கோலாரில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனதாதளம் (எஸ்) கட்சி மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமியிடம், அக்கட்சியின் இளம் தொண்டர் ஒருவர், தனக்கு பெண் கிடைக்கவில்லை என்றும், தனக்கு நீங்கள் தான் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை கடிதம் வழங்கிய சம்பவமும் அரங்கேறியது. இந்த நிலையில் 30 வயதை கடந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களுக்கு திருமணத்துக்கு பெண் கிடைக்காததால் விரக்தி அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் திட்டமிட்டப்படி திருமணம் ஆகாத வாலிபர்கள் நேற்று மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா பாரதிநகருக்கு வந்




