காரியாபட்டி அருகே‌ ஜல்லிக்கட்டு திடீர் ரத்து..

IMG 20230305 WA0060 - 2026

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் ஸ்ரீ அழகிய நாச்சியம்மன் சாமி, பெரிய கருப்பண்ணசாமி திருக்கோயில் மாசி களரி பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் திடீர் ரத்தால் ஏமாற்றத்துடன் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் திரும்பிச் சென்றனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூரில் ஸ்ரீஅழகியநாச்சி அம்மன் சாமி, மற்றும் பெரிய கருப்பண்ணசாமி திருக்கோயில் மாசி களரி பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

அதனை ஒட்டி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது இதற்காக மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் ஆன்லைனில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளை உரிமையாளர்கள் தங்கள் காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்திருந்தனர். அதில் 600 காளைகள் போட்டியில் பங்கேற்பதற்காக தேர்வு செய்யப்பட்டிருந்தன 450 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர்.

இன்று காலை 8 மணியளவில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை முன்னிட்டு ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வந்தன. இதில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாச பெருமாள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை, விருதுநகர் ராமநாதபுரம், தூத்துக்குடி, திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காளை உரிமையாளர்கள் தங்களது காளைகளை அழைத்து வந்திருந்தனர். இந்நிலையில் இந்த போட்டிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு குறைபாடுகள் காரணமாகவும்,போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை, எனக் கூறி பொதுப்பணித்துறை அனுமதி வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் காளைகள் பதிவு அனைத்தும் ஆன்லைனில் இருந்ததால் உள்ளூர் காளைகள் எதுவும் பதிவு செய்ய முடியவில்லை எனவும் இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடயே பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் போதிய பரிசு பொருட்களும் இல்லை எனவும் கூறப்படுகிறது. நிலையில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இருந்த நிலையில் திடீரென போட்டிகளை ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஜல்லிக்கட்டு போட்டிகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் காளை உரிமையாளர்கள் மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தங்கள் காளை வெற்றி பெறும் என்ற மகிழ்ச்சியுடன் நீண்ட தூரம் தங்களது காளைகளை அழைத்து வந்த காளை உரிமையாளர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories