காரியாபட்டி அருகே‌ ஜல்லிக்கட்டு திடீர் ரத்து..

IMG 20230305 WA0060 - 2026

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் ஸ்ரீ அழகிய நாச்சியம்மன் சாமி, பெரிய கருப்பண்ணசாமி திருக்கோயில் மாசி களரி பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் திடீர் ரத்தால் ஏமாற்றத்துடன் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் திரும்பிச் சென்றனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூரில் ஸ்ரீஅழகியநாச்சி அம்மன் சாமி, மற்றும் பெரிய கருப்பண்ணசாமி திருக்கோயில் மாசி களரி பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

அதனை ஒட்டி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது இதற்காக மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் ஆன்லைனில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளை உரிமையாளர்கள் தங்கள் காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்திருந்தனர். அதில் 600 காளைகள் போட்டியில் பங்கேற்பதற்காக தேர்வு செய்யப்பட்டிருந்தன 450 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர்.

இன்று காலை 8 மணியளவில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை முன்னிட்டு ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வந்தன. இதில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாச பெருமாள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை, விருதுநகர் ராமநாதபுரம், தூத்துக்குடி, திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காளை உரிமையாளர்கள் தங்களது காளைகளை அழைத்து வந்திருந்தனர். இந்நிலையில் இந்த போட்டிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு குறைபாடுகள் காரணமாகவும்,போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை, எனக் கூறி பொதுப்பணித்துறை அனுமதி வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் காளைகள் பதிவு அனைத்தும் ஆன்லைனில் இருந்ததால் உள்ளூர் காளைகள் எதுவும் பதிவு செய்ய முடியவில்லை எனவும் இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடயே பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் போதிய பரிசு பொருட்களும் இல்லை எனவும் கூறப்படுகிறது. நிலையில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இருந்த நிலையில் திடீரென போட்டிகளை ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஜல்லிக்கட்டு போட்டிகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் காளை உரிமையாளர்கள் மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தங்கள் காளை வெற்றி பெறும் என்ற மகிழ்ச்சியுடன் நீண்ட தூரம் தங்களது காளைகளை அழைத்து வந்த காளை உரிமையாளர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories