December 6, 2025, 8:53 AM
23.8 C
Chennai

எழுத்தாள எம்.பி.,க்கு எகத்தாளம் ஏன்?

train accident modi talk - 2025
#image_title

“ரயில் விபத்து ஏற்பட்டால் நீதிபதி குழு விசாரணை தான் அமைக்க வேண்டும் என்றும் ஆனால் மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது சந்தேகத்தை உண்டாக்கி உள்ளது என்றும், ரயில்வே நிர்வாகம் மற்றும் மத்திய அரசின் தவறை மறைக்கவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது” என்றும் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் கூறியிருப்பது பெருத்த சந்தேகத்தை வரவழைக்கிறது.

தொடர்ந்து இது போன்று தவறான தகவல்களை தான் தெரிவித்து கொண்டிருக்கிறார் வெங்கடேசன் அவர்கள். 2010 ம் ஆண்டு, மேற்கு வங்காளத்தில் ஜனனேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தையடுத்து சி பி ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மம்தா பானர்ஜி அவர்கள் கேட்ட போது பதறித் துடித்து, முடியாது என்று அன்றைய மேற்கு வங்காள கம்யூனிஸ்ட் அரசு மறுத்தது ஏன்?

அந்த விபத்து குறித்து சி பி ஐ விசாரித்து மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த குற்றவாளிகளை கைது செய்ததும், இன்று வரை வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதும் வெங்கடேசனுக்கு தெரியுமா? அதே போன்று இப்போதும் சி பி ஐ விசாரணை தேவையில்லை என கம்யூனிஸ்டுகள் அலறுவது தான் சந்தேகத்தை வரவழைக்கிறது, யார் செய்த தவறை மறைக்க அன்று சி பி விசாரணை வேண்டாம் என்று கம்யூனிஸ்டுகள் சொன்னார்கள்? இன்று வேண்டாம் என்று ஏன் சொல்கிறார்கள்?

அதே போல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் சி பி ஐ என்பது குற்றங்களை கண்டு பிடிக்க தான் உள்ளதே தவிர,விபத்துகளை அல்ல என்றும் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. 2010ம் ஆண்டு ஜனனேஸ்வரி ரயில் விபத்துக்கு சி பி ஐ விசாரணை அளித்தது ஏன்?

அன்றைய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்யாதது ஏன்? அன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் மேற்கு வங்காள மாநில அரசை சி பி ஐ விசாரணைக்கு வற்புறுத்தியது ஏன்? காங்கிரஸ் ஆட்சியில் சி பி ஐ விசாரணை செய்தது சரி, பா ஜ க ஆட்சியில் தவறா?

நடந்த இந்த துன்ப சம்பவத்திற்கான காரணத்தையும், காரணமானவர்களையும் நீதியின் முன் நிலை நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

தொழில் நுட்ப ரீதியாக ரயில்வே துறையும், குற்றவியல் ரீதியாக சி பி ஐ யும் விசாரிப்பதில் எந்த தவறும் இல்லை. அதை எதிர்ப்பவர்கள் எதை கண்டு அச்சப்படுகிறார்கள் என்பதே நம் கேள்வி?

நாராயணன் திருப்பதி. – Narayanan Thirupathy

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories