இடியாப்பச் சிக்கலில் எடியூரப்பா! முந்திக் கொண்டு வாழ்த்திய மு.க. ஸ்டாலின்!

Published:

stalin tweet - 2026

கர்நாடக மாநிலத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியபோது, காங்கிரஸ் முன்னிலை பெற்று வந்தது. பின்னர் பாஜக., சமமான அளவில் முன்னிலைக்கு வர, தொடர்ந்து பாஜக., அதிக இடங்களில் முன்னிலையில் இருந்தது. இதனால் 116 இடங்களுக்கு மேல் முன்னிலையில் இருந்ததால் பாஜக., ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பெற்றுவிட்டதாக பலரும் கருதினார்கள்.

இந்நிலையில், அரசியல் தலைவர்களும் முந்திக் கொண்டு முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்ட எடியூரப்பாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த வாழ்த்தை ப.சிதம்பரம் உள்ளிட்டோர் விமர்சித்து சர்ச்சை ஆக்கியுள்ள நிலையில், இதேபோல பாஜக., வெற்றி உறுதி ஆகும் முன்பே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியதும் சர்ச்சை ஆகியிருக்கிறது.

எடியூரப்பா முதல்வராக வர வேண்டியவர், ஆனால் அவருக்கு இப்படியான இடியாப்பச் சிக்கல் வந்ததற்குக் காரணம் ஸ்டாலின் சொன்ன வாழ்த்துதான் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

 

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img