காம்ரேட் தலையில் கரகம்! கம்யூனிஸ்டை பிடித்தாட்டும் கெரகம்!

sitharam yechury - 2026

காம்ரேட் சீதாராம் யெச்சூரி அம்மனுக்காக தலையில் கலசம் தூக்குகிறார்.. தோழர் அருணாசலம் தனது 40வது வயதில் சிவலிங்கத்தைத் தரிசித்து மெய்சிலிர்க்கிறார், ஆடி அமாவாசையன்று ஸ்டாலினிச கொலைவெறியால் மாண்டுபோன பெயர்தெரியாத ஜீவன்களுக்கும் சேர்த்து தர்ப்பணம் செய்கிறார்..

தோழர் கெ.கெ.எம் தனது பேரனின் மழலை மொழியில் ஸ்ரீகிருஷ்ணனின் புல்லாங்குழல் ஓசையைக் கேட்கிறார்.. தனது 25ம் வயதில் பூணூலை அறுத்து விபூதியை அழித்த காலஞ்சென்ற காம்ரேட் கேசவன் தனது 55ம் வயதிற்கு மேல் அவற்றை மீண்டும் அணிந்து ரமணரிடம் சரணடைகிறார்.. இப்படி எத்தனையோ.

இது தான் இந்திய நிதர்சனம். பின்தொடரும் நிழலின் குரல்.

இந்த இந்து தேசத்தில், பாரதபூமியில் பிறந்து வளர்ந்த புண்ணியத்தால் தான், மார்க்சிய மனஇருள் என்னும் மலினத்திலிருந்து, கம்யூனிச கொலைபாதகம் என்னும் கயமைத்தனத்திலிருந்து விடுபடுவதற்கான ஒரு வாய்ப்பும் வாயிலும் இவர்களுக்கு வாய்த்திருக்கிறது. மற்ற பல நிலங்களில் இந்தப் படுகுழியில் வீழ்ந்தவர்கள் பலர் எழுந்திருந்து வாழ்ந்ததாக சரித்திரமில்லை.

எங்கும்போய்க் கரைகாணாது எறிகடல்வாய் மீண்டு ஏயும்
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே

என்பது போல, எங்கெங்கோ இலக்கின்றிப் பறந்து திரியும் கடற்காகங்களும் இந்து தர்மம் என்ற வங்கத்திற்குள் தான் வந்து சரணடைய வேண்டும்.

(பி.கு. காலஞ்சென்ற காம்ரேட் கேசவன் – எனது பெரியப்பா).

#கம்யூனிசம் #இடதுசாரிகள் #மார்க்சியம் #இந்துத்துவம்#இந்துமதம் #தர்மம் #மீட்சி

கருத்து – ஜடாயு, பெங்களூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories