கருணாநிதியின் ஜாதகம் என்ன சொல்கிறது? ஆயுளை அலசும் ஆரூடம் சரியா?!

karunanidhi health temple praying - 2026

சென்னை: பகுத்தறிவுக் கொள்கையில் ஊறிய திமுக., தலைவர் கருணாநிதி உடல் நிலை மோசமான நிலையில் சென்னை ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சையில், மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

கடவுள் நம்பிக்கை, ஜோதிட நம்பிக்கை இவை எல்லாம் இல்லாவிட்டாலும், கருணாநிதியின் குடும்பத்தில் உள்ள பெண்கள் சிலருக்கு கடவுள் நம்பிக்கையும் ஜோதிடத்தில் தீவிர நம்பிக்கையும் உண்டு என்பது உலகறிந்த விஷயம். தேர்தல் நேரத்தில் தலைவர்களின் ஜாதகங்களை அலசி ஆராய்ந்து இவர் வெற்றி பெறுவார், இவருக்கு சிரமம் என்றெல்லாம் கணித்துச் சொல்லும் ஜோதிடர்கள், கருணாநிதி உடல் நலம் குன்றி இருக்கும் இந்த நேரத்தில் ஜாதகத்தைக் கணித்து அவரவர் புலமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

பொதுவாக, ஒருவருக்கு ஆயுள் கெட்டியா, தீர்க்கமா, அல்ப ஆயுளா என்றெல்லாம் கணித்துச் சொல்வது ஜோதிடத்தில் உண்டு. ஆனால், ஒருவரின் இறப்பு இந்நாளில் என்று யாராலும் கணித்துச் சொல்ல இயலாது. இயற்கையின் சட்ட நியதிகளுக்கு மனிதனின் சாத்திர அறிவு அகப்படாது!

இந்நிலையில், கருணாநிதிக்கு தற்போதைய கிரகக் கட்டங்கள் எந்த நிலையில் இருக்கின்றன, அவை என்ன சொல்லுகின்றன என்று ஜோதிடர்கள் சில தங்களது வலைத்தளப் பக்கங்களில், சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

அவர்களில் ஒருவராக, கருணாநிதியின் ஜாதக அமைப்பு குறித்து ஜோதிடர் சுப்ரமணியம் கூறியுள்ளது…. கருணாநிதி ஜாதகத்தில் லக்னம் கடன லக்னம். லக்னாதிபதி சந்திரன் லாப ஸ்தானத்தில் 11வது இடத்தில் உச்சம் பெற்றுள்ளார்.
சந்திரனோடு இரண்டாம் இடத்தின் அதிபதி சூரியனும் உச்சம் பெற்றுள்ளார்.
இதன் மூலம் அவர் சுறுசுறுப்பாக இயங்கும் தன்மையை இயற்கையிலேயே பெற்றிருப்பார்.

இவர் ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் உச்சமாக உள்ளன. தற்போதைய கால கட்டத்தில் அவருக்கு சுக்கிர திசை நடக்கிறது. குரு கேட்டை நட்சத்திரத்தில் இயங்குகிறார்.
மேலும் புதன் கடக லக்னத்துக்கு பாதக அதிபதியாகிறார்.  இதனால்தான் தற்சமயத்தில் அவருக்கு உயிர்ச் சோதனை ஏற்பட்டுள்ளது. இந்த சோதனையை வென்று அவர் நல்ல நிலைக்கு வரவேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் அது வேதனையளிக்கும் விதத்திலும் இருக்கலாம். இது கருணாநிதிக்கு சோதனையான காலம்… என்று கூறியுள்ளார்.

ஆத்திகராக இருந்தால் இது போன்ற ஜோதிடக் கணிப்புகளில் நம்பிக்கை கொண்டு ஏதாவது பரிகாரம் செய்ய இறங்குவார்கள். ஆனால், கருணாநிதி மீது பற்று கொண்டிருக்கும் தொண்டர்கள் சிலரோ இப்போது கோயில்களில் கூட்டு வழிபாடுகளில் இறங்கியுள்ளனர்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories