ஈபிஎஸ்., ஓபிஎஸ்., யார் என் தூது வந்தாலும் சேர்க்க மாட்டேன்: டிடிவி தினகரன்!

edappadi dinakaran panneerselvam - 2026

எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் என எவர் தரப்பில் சமாதான தூது அனுப்பினாலும், எங்கள் பக்கம் யாரையும் சேர்க்க மாட்டோம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அதிமுக.,வுக்கு சரியான கவர்ச்சிகரமான தலைவர் மாட்டவில்லை. எம்.ஜி.ஆர்., என்ற சினிமாக் கவர்ச்சியில் மக்கள் சேர்ந்தாலும், மக்களைத் தன் பக்கம் வைத்துக் கொண்ட கெட்டிக்காரத்தனத்தை எம்.ஜி.ஆர். கொண்டிருந்தார். அது போல் எம்.ஜி.ஆர்.க்குப் பின்னர் ஜெயலலிதாவும் சினிமா கவர்ச்சியில், அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தார்.

அதிமுக.,வில் இவர்களை விட்டால் வேறு எந்த சினிமா கவர்ச்சியும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்னமும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற பெயர்களையே சொல்லிக் கொண்டு கட்சியை நடத்தும் நிலைக்கு அதிமுக., தள்ளப் பட்டிருக்கிறது. ஜெயலலிதா இருந்தா காலத்தில் இருந்தே எந்த தலைவரும் உருப்படியாக உருவாகவில்லை.

சினிமா கவர்ச்சியும் இல்லாமல், குண்டர்கள், கொள்ளையர்கள் என்ற இமேஜுடன் மட்டுமே இருந்ததால், சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினரால் மக்களின் ஆதரவைப் பெற முடியாமல் போய்விட்டது. தற்போது, மக்களின் செல்வாக்கோ, கவர்ச்சியோ இல்லாத நிலையில் ஓபிஎஸ்., ஈபிஎஸ் என இரண்டு பேர் முதல்வர்களாக பதவியைப் பிடித்தார்கள் என்றாலும், கட்சியினரிடையே கூட அவர்களுக்கு முழு ஆதரவும் கிடைக்கவில்லை.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

இந்த நிலையில், அரசியல் கோமாளியாகவும் ஊழல் குடும்பத்தில் பிரதிநிதியாகவும் இமேஜ் பெற்றுள்ள டிடிவி தினகரன், தன் பக்கம் ஓபிஎஸ்., ஈபிஎஸ் தரப்பு வரும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்.

நேற்று செய்தியாளர்களை தினகரன் சந்தித்த போது ‘ எடப்பாடி தரப்பில் இருந்து அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் உங்களிடம் சமாதானம் பேசினால் ஏற்றுக்கொள்வீர்களா?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூறிய தினகரன் “யாரும் சேர்த்துக்கொள்ள மாட்டோம்” என பதிலளித்தார்.

அதிமுக., கைக்கு கிடைக்காத விரக்தியில் அமமுக என கட்சி ஆரம்பித்து ஏதோ ஒரு தொகுதியில் பண மழை பொழிந்து, அந்தத் தொகுதியிலும் பலரின் அதிருப்தியைப் பெற்றுக் கொண்ட டிடிவி தினகரன், இன்னமும் ஓபிஎஸ்., ஈபிஎஸ் தன் பக்கம் வருவார்கள் என்று நப்பாசையுடன் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories