February 21, 2026, 1:46 PM
29.5 C
Chennai

இந்திய எல்லையில் ரபேல்… போருக்கு தயாராக உஷார் படுத்தும் சீனா! இதனால்தான் ராகுல் ரபேல் குரல் எழுப்புகிறார்!

rafale crafts - 2026

சீன எல்லைக்கருகே ரபேல் விமானங்கள் நிறுத்தப் படுமென்பதால் போருக்கு தயாராக இருங்கள் என்று சீனா கேட்டுக்கொண்டுள்ளது. சீன அதிபர் அந்நாட்டு இராணுவத்திடம் அவசரநிலையை உணர்ந்து போருக்கு தயாராக இருக்கும்படி கேட்டுள்ளார்.

கடந்த நூற்றாண்டுகளில் காணாத அளவு உலகம் பெரிய அளவு மாற்றமடைந்து வருகிறது என சீன இராணுவத்திடம் அவர் கூறியுள்ளார். சீன ராணுவம் ரிஸ்க் மற்றும் சவால்களை சந்தித்து வருவதால் சீன மேம்பாட்டு தேவையை பாதுகாக்க போருக்கு தயாராக இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இந்தக் காலத்திற்கு ஏற்றவாறு ராணுவ செயல்பாடுகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தைவான் மீது தனது படைபலத்தை பயன் படுத்த சீனா இன்னும் உரிமை பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்தியாவும் தனது புதிய ரபேல் விமானங்களை சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு அருகே உள்ள முக்கியத் தளங்களில் நிறுத்த உள்ளது.

இந்தியாவும் இருமுனை தாக்குதல்களில் இருந்து தன் நாட்டைப் பாதுகாக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஹரியானாவின் அம்பாலா மற்றும் வங்காளத்தின் ஹசிம்புரா தளத்தில் ரபேல் நிறுத்தப்பட உள்ளது.

இந்தியா தற்போதைய நிலையில், தன் வான் பாதுகாப்பை உறுதிப்படுத்த விமானப் படையின் சு-30ஐ தான் நம்பியுள்ளது. ரஃபேல் விமானங்கள் பணியில் ஈடுபடும் போது, இந்திய வான் பாதுகாப்பு மேலும் பலப்படும்!

ஏற்கெனவே சீன தூதருடன் ரகசிய சந்திப்பு டீபார்ட்டி நடத்திவிட்டு, பின்னர் சமாளித்த ராகுல் காந்தி, ரபேல் காந்தியாகி இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரம் எதுவும் என்னிடம் இல்லை, ஆனால் ஊழல் நடைபெற்றுள்ளது என்று மட்டும் எனக்குத் தெரிகிறது என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் ஏஜெண்டுகள் போல் ராகுலும் கங்கிரஸாரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ராகுலின் குரலை பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் அப்படியே எதிரொலிக்கிறார். இங்கே இந்தியாவில் மோடிக்கு எதிரான மோசமான பிரசாரத்தை முன்மொழிவதாக கருதிக் கொண்டு, தேச விரோத கோஷங்களை ராகுலும், காங்கிரஸாரும் எழுப்பிக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரபேல் விவகாரத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும், ராகுல் இன்னமும் ஊழல் என்று அடம்பிடித்துக் கொண்டிருப்பது, சீன, பாகிஸ்தானின் நலன்களைக் கட்டிக் காக்கவும், இந்திய நலனை காவு கொடுக்கவும் பெரும் தொகையை வாங்கிக் கொண்டு ரகசிய ஒப்பந்தங்கள் செய்துகொண்டுள்ளாரோ என்று சந்தேகத்தை எழுப்புகின்றனர் நிலைமையை கூர்ந்து கவனிப்பவர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories