மசூத் அசார் மரணத்தில் மர்மம்! நீதி விசாரணை கோரி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!

onrekalpakkanaledu copy - 2026

எச்சரிக்கை! இது நம் ஒன்றேகால் பக்க நாளேடு! 

“மசூத் அசார் மரணத்தில் மர்மம் உள்ளது. நீதி விசாரணை வேண்டும் ” என்று தமிழகத்தில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக பேரணி பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

இதனிடையே, மசூத் அசார் மகனே வருக! மகத்தான ஆதரவு தருக!! என்று திராவிடக் கட்சிகள் தமிழகம் எங்கும் ப்ளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மசூத் அசார் தம்பிகள் நாங்கள் – மாற்றான் தோட்டத்து மல்லிக்கை மொட்டுகள் நாங்கள் என்ற முழக்கங்கள் கூறி மசூத் அசாருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டனர்.

மேலும், ஜெகாஸ் – உக்காஸ் நாட்டில் கி.மு ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பு தேநீர் விடுதியில் சந்தித்தபோது மசூத் அசாரின் முன்னோர்கள் எங்கள் முன்னோருடன் வர்த்தக குடும்ப உறவுகள் வைத்திருந்தனர்  என்று உண்மை வரலாறை உரக்கச் சொல்லி, மசூத்தின் மர்ம மரணத்திற்குக் காரணம் வேதாந்தா கம்பெனி என்று ஒப்பாரி வைத்தார் ஒருவர்.

ALSO READ:  அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”68″ order=”desc”]


இன்னொருவர், சனாதனம் இருப்பதால் தான் மசூத் அசார் மர்ம கொலை நடந்தது என்று உள்ளக்குமுறலுடன் ஆவேசமாகப் பேசினார்.

இந்தப் பொதுக் கூட்டத்தில், மசூத் அசார் கட்சியோடு கூட்டணி வைக்கலாம் என்று உலக தேர்தலை மையமாக வைத்து நான் திட்டம் வகுத்த வேளையில் இடி போல் இதயத்தைத் தாக்கியது இவரது மரணம் என்று இரங்கல் தீர்மானத்தை வாசித்தார் ஒருவர்.

மசூத் அசாரும் நானும் பாசறையில் துப்பாக்கி சுடும் போது ஏகே 840 ரகம் பற்றி எனக்கு அவர் தான் சொல்லிக் கொடுத்தார் என்று சிரித்துக் கொண்டே இரங்கல் தீர்மானம் வாசித்தார் ஜெபஸ்டின் ஜீமான்.

இதனிடையே, மசூத் அசார் நலமாக உள்ளார் என்றும், தவறான தகவல் பரப்பப் பட்டு வருவதாகவும், அவர் நேற்றுதான் 2 இட்லி 4 இடியாப்பம் சாப்பிட்டார் என்றும் இந்தக் கூட்டமே தவறானது என்றும் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

– கருத்து: ராம. ரவிக்குமார்

meme asar - 2026

ALSO READ:  சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

Entertainment News

Popular Categories