December 5, 2025, 5:42 PM
27.9 C
Chennai

யாருமே இல்லாத கடைல எதுக்குடா டீ ஆத்துறீங்க..?!

kanimozhi with team - 2025

தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மட்டுமே விருப்ப மனு அளித்துள்ளார். அவரிடம் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்திய புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உள்கட்சி ஜனநாயகம் என்பது இதுதான் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே போட்டியிட்டு, அதற்கு நேர்காணல் வேறு நடத்துகிறார்களா என்று சிலர் கேள்விகளை முன்வைக்கின்றனர்.

அதற்கு பதிலளித்த சிலர், இதே போல் தான் மு.கருணாநிதியும் கூட ஸ்டாலினை நேர்காணல் செய்திருக்கிறார் என்று திமுக., ஜனநாயகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர்.

dmk stalin - 2025

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் கனிமொழி மட்டுமே விருப்ப மனு செய்த நிலையில் அவரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். இதனால் தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட பல மாதங்களுக்கு முன்பே முடிவு செய்த கனிமொழி அத் தொகுதியில் தேர்தலுக்கான ஆரம்பக் கட்ட பணிகளையும் ஏற்கனவே முடுக்கி விட்டுள்ளார்.

இதனால் திமுகவில் விருப்ப மனு பெற்ற போது தூத்துக்குடி தொகுதியில் திமுகவில் கனிமொழியைத் தவிர வேறு யாரும் விருப்ப மனு செய்யவில்லை. இந்நிலையில் நேற்று தூத்துக்குடி தொகுதிக்கான வேட்பாளரை தேர்வு செய்ய நேர்காணல் நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேர்காணலில் ஆஜரான கனிமொழி தொகுதியில் தமக்குள்ள வெற்றி வாய்ப்புகள் குறித்து எடுத்துக் கூறினார்.

தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் களமிறங்க திட்டமிட்டுள்ளதால் நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது தூத்துக்குடி. இதனால் பிரச்சாரத்திலும் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் இன்று கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் பேசிய பாஜக., தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், `தமிழ் மொழியையா வளர்த்தீர்கள்? கனிமொழியைத்தானே வளர்த்தீர்கள்!’ என்று காரசாரமாகத் துவக்கியுள்ளார்.

ஆக.. ஆக… தூத்துக்குடியில் சூடு பிடிக்கத் தொடங்கிட்டுது..!

1 COMMENT

  1. குடும்ப அரசியலின் ஒளி தூத்துக்குடியில் ?
    மக்களால் தேர்ந்தெடுக்கப்படமாட்டார் என்பதால் கனிமொழிக்கு வேட்டு வைக்க ஸ்டாலினின் தந்திரமோ ? கொல்லைப்புறமாக செல்லும் வழியையும் வை.கோ.அடைத்துவிட்டாரே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories