
ரயில் பயணிகளின் பயண நேரத்தை குறைக்கும் வகையில் சென்னை, மதுரை இடையேயான ரயில் சேவையில் 10 ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது
இதன்படி இந்த நடைமுறை வருகின்ற 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை வருகின்ற ஜூலை 1ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இதில் சென்னை, மதுரை வழித்தடத்தில் சுமார் 10 ரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 1ம் தேதி புதிய கால அட்டவணை நடைமுறைக்கு வரும்போது 5 முதல் 20 நிமிடங்கள் வரை பயண நேரம் குறைய வாய்ப்பு உள்ளது.
குறிப்பிட்ட நேரத்தில் இடத்தை அடையும் நோக்கிலும், தாமதமாக செல்வதை தவிர்க்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள கால அட்டவணைப்படி, சென்னை, மதுரை இடையே பாண்டியன் விரைவு ரயில், அனந்தபுரி விரைவு ரயில் ஆகியவற்றின் பயண நேரம் 7 மீ நேரம் 50 நிமிடங்களாக குறைக்கப்பட உள்ளது.
இதே போன்று சென்னை, கொல்லம் விரைவு ரயில், குருவாயூர் விரைவு ரயில் முறையே 20 நிமிடங்கள், 10 நிமிடங்கள் முன்னதாக சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
நெல்லை விரைவு ரயில், முத்துநகா் விரைவு ரயில் 5 நிமிடங்கள் பயண நேரம் குறைக்கப்பட உள்ளது.
மேலும் சென்னையில் இருந்து புறப்படும் நெல்லை அதிவிரைவு ரயில் ஜூலை 1ம் தேதி முதல் 7.50க்கும், அனந்தபுரி விரைவு ரயில் 8.10க்கும் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


