December 6, 2025, 12:46 AM
26 C
Chennai

குற்றவாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய சப்-இன்ஸ்பெக்டர்; விசாரணைக்கு உத்தரவு…..!

VELUR SI - 2025

வேலூரில் ஆள்கடத்தல், செயின் பறிப்பு குற்றவாளிகளுடன் சப்-இன்ஸ்பெக்டர் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவே‌‌ஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மதுவிலக்குப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் செல்வராஜ். இவர் இதற்கு முன்பு வேலூர் தெற்கு போலீஸ்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். வேலூரில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இவர் கடந்த மே மாதம் 3-ந்தேதி இரவில் கஸ்பாவில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்புக்கு செல்லும் வழியில் சாலையில் வைத்து தனது நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் செயின் பறிப்பு, ஆள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய சிலரும் உடனிருந்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், காகிதப்பட்டறையில் நிதிநிறுவன உரிமையாளர் நந்தகுமார் (வயது24) என்பவர் கடந்த மே மாதம் 7-ந் தேதி கடத்தப்பட்ட வழக்கில் தொரப்பாடியை சேர்ந்த கருப்பு ஜெகதீ‌‌ஷ், ஸ்கெட்ச் பரத், தமீம் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது.

7-ந்தேதி நந்தக்குமாரை கடத்துவதற்கு முன்பு 3-ந் தேதி இரவு சப்-இன்ஸ்பெக்டர் பிறந்தநாள் விழாவில் 3 பேரும் கலந்துகொண்டுள்ளனர்.

இவர்களில் கருப்பு ஜெகதீ‌‌ஷ் என்பவர் செயின் பறிப்பு வழக்கில் கைதானவர் என்றனர்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவே‌‌ஷ்குமாரிடம் கேட்டபோது சப்-இன்ஸ்பெக்டர் பிறந்தநாள்விழாவில் குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் கலந்துகொண்டதாக புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories