குற்றவாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய சப்-இன்ஸ்பெக்டர்; விசாரணைக்கு உத்தரவு…..!

VELUR SI - 2026

வேலூரில் ஆள்கடத்தல், செயின் பறிப்பு குற்றவாளிகளுடன் சப்-இன்ஸ்பெக்டர் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவே‌‌ஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மதுவிலக்குப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் செல்வராஜ். இவர் இதற்கு முன்பு வேலூர் தெற்கு போலீஸ்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். வேலூரில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இவர் கடந்த மே மாதம் 3-ந்தேதி இரவில் கஸ்பாவில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்புக்கு செல்லும் வழியில் சாலையில் வைத்து தனது நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் செயின் பறிப்பு, ஆள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய சிலரும் உடனிருந்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், காகிதப்பட்டறையில் நிதிநிறுவன உரிமையாளர் நந்தகுமார் (வயது24) என்பவர் கடந்த மே மாதம் 7-ந் தேதி கடத்தப்பட்ட வழக்கில் தொரப்பாடியை சேர்ந்த கருப்பு ஜெகதீ‌‌ஷ், ஸ்கெட்ச் பரத், தமீம் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது.

7-ந்தேதி நந்தக்குமாரை கடத்துவதற்கு முன்பு 3-ந் தேதி இரவு சப்-இன்ஸ்பெக்டர் பிறந்தநாள் விழாவில் 3 பேரும் கலந்துகொண்டுள்ளனர்.

இவர்களில் கருப்பு ஜெகதீ‌‌ஷ் என்பவர் செயின் பறிப்பு வழக்கில் கைதானவர் என்றனர்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவே‌‌ஷ்குமாரிடம் கேட்டபோது சப்-இன்ஸ்பெக்டர் பிறந்தநாள்விழாவில் குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் கலந்துகொண்டதாக புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Entertainment News

Popular Categories