February 22, 2026, 3:47 AM
25.6 C
Chennai

குற்றவாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய சப்-இன்ஸ்பெக்டர்; விசாரணைக்கு உத்தரவு…..!

VELUR SI - 2026

வேலூரில் ஆள்கடத்தல், செயின் பறிப்பு குற்றவாளிகளுடன் சப்-இன்ஸ்பெக்டர் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவே‌‌ஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மதுவிலக்குப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் செல்வராஜ். இவர் இதற்கு முன்பு வேலூர் தெற்கு போலீஸ்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். வேலூரில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இவர் கடந்த மே மாதம் 3-ந்தேதி இரவில் கஸ்பாவில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்புக்கு செல்லும் வழியில் சாலையில் வைத்து தனது நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் செயின் பறிப்பு, ஆள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய சிலரும் உடனிருந்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், காகிதப்பட்டறையில் நிதிநிறுவன உரிமையாளர் நந்தகுமார் (வயது24) என்பவர் கடந்த மே மாதம் 7-ந் தேதி கடத்தப்பட்ட வழக்கில் தொரப்பாடியை சேர்ந்த கருப்பு ஜெகதீ‌‌ஷ், ஸ்கெட்ச் பரத், தமீம் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது.

7-ந்தேதி நந்தக்குமாரை கடத்துவதற்கு முன்பு 3-ந் தேதி இரவு சப்-இன்ஸ்பெக்டர் பிறந்தநாள் விழாவில் 3 பேரும் கலந்துகொண்டுள்ளனர்.

இவர்களில் கருப்பு ஜெகதீ‌‌ஷ் என்பவர் செயின் பறிப்பு வழக்கில் கைதானவர் என்றனர்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவே‌‌ஷ்குமாரிடம் கேட்டபோது சப்-இன்ஸ்பெக்டர் பிறந்தநாள்விழாவில் குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் கலந்துகொண்டதாக புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories