December 6, 2025, 12:05 AM
26 C
Chennai

தலிபான், ஐஎஸ்ஐஎஸ் கூட்டுச் சதி? காபூல் குண்டுவெடிப்பில் 68 பேர் பலி….!

BAM PELS - 2025
ஆப்கானிஸ்தானின் காபூலில் திங்கள்கிழமை ஏற்பட்ட மிகப்பெரிய குண்டுவெடிப்புத் தாக்குதலில் 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அலுவலகம், கால்பந்து மற்றும் கிரிக்கெட் வாரியங்கள் அமைந்துள்ள, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இந்த குண்டுவெடிப்புத் தாக்குதல் நடைபெற்றுள்ளதை ஆப்கான் அமைச்சக செய்தித்தொடர்பாளர்கள் வஹிதுல்லா மாயார் மற்றும் நஸ்ரத் ரஹிமி ஆகியோர் உறுதிபடுத்தினர்.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இருப்பினும் இது தலிபான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளின் கூட்டுச் சதியாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும் இதுகுறித்த கூடுதல் விவரங்களை அந்நாட்டு அரசு இதுவரை வெளியிடவில்லை.

முன்னதாக, காந்தஹார் மாகாணத்தில் அரசுக் கட்டடம் ஒன்றை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். அதில் 11 பேர் காவல்துறையினர், 8 பேர் தேர்தல் பணியாளர்கள். தாக்குதல் நிகழ்த்திய தலிபான்கள் மீது, ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நிகழ்த்திய பதிலடித் தாக்குதலில் 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, தலிபான்களுடன் அமெரிக்கா 7-ஆவது கட்டப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள நிலையில் இதுபோன்ற அடுத்தடுத்த தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories