இந்தியாவுடனான தூதரக உறவுகளைக் குறைத்துக் கொள்கிறது பாகிஸ்தான்!

india pakistan dispute - 2026

காஷ்மீர் விவகாரம் எதிரொலியாக, இந்தியாவுக்கான தூதரை திரும்பப்பெற பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. மேலும் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரை நாட்டைவிட்டு வெளியேற அறிவுறுத்த உள்ளதாக தகவல் வெளியானது.

இந்தியா உடனான தூதரக உறவுகளை குறைத்துக்கொள்ள பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை நிறுத்தவும் பாகிஸ்தான் முடிவு  செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. பாகிஸ்தானில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. மேலும், காஷ்மீர் விவகாரம் குறித்து ஐநா.,வின் சர்வதேச பாதுகாப்பு கவுன்சிலிடம் முறையிட பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

முன்னதாக, இந்தக் கூட்டத்தில் இந்தியாவுடன் தூதரக உறவை பாகிஸ்தான் முறித்து கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் அமைச்சர் பாவத் சௌத்ரி கூறினார்.

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால், இரு தரப்பு பேச்சுவார்த்தையை இந்தியா ஏற்கெனவே நிறுத்தி வைத்துள்ளது. பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால், மட்டுமே பேச்சுவார்த்தை நடக்கும் என இந்தியா உறுதிபட கூறியுள்ளது. இந்நிலையில், ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு, பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கான தனது தூதரை திரும்ப பெற்று கொள்ள அந்நாடு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பாவத் சௌத்ரி கூறுகையில், நம்முடன் பேசுவதற்கு இந்தியா தயாராக இல்லாத போது, நமது தூதர் ஏன் அங்கு இருக்க வேண்டும்? இந்தியாவுடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். நமது தூதர் அங்கேயும், இந்திய தூதர் இங்கேயும் இருப்பதால் என்ன பயன்? என்று கூறினார்.

370 வது பிரிவை திரும்பப் பெற்று, ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பது இறுதியாக இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுடனான ராஜீய உறவுகளை குறைத்துக் கொள்வதாக பாகிஸ்தான் இப்போது அறிவித்துள்ளது. இந்தியாவுடனான இருதரப்பு வர்த்தகத்தை நிறுத்துவதாகவும் கூறியுள்ளது. இருதரப்பு உறவுகளையும் மறுஆய்வு செய்ய பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

பாகிஸ்தான் தனது தூதரை இந்தியாவில் இருந்து திரும்ப அழைத்து பாக்கிஸ்தானுக்கான இந்திய தூதரை வெளியேற்றப்போவதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் ஊடகங்களுக்கு இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புதன்கிழமை இன்று இஸ்லாமாபாத்தில் தேசிய பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தை நடத்தியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

imrankhan - 2026கூட்டத்தில் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்ட குழு, இது குறித்து அறிவித்தது:

இந்தியாவுடனான ராஜீய உறவுகளை குறையுங்கள். இந்தியாவுடனான இருதரப்பு வர்த்தகத்தை நிறுத்துங்கள். இருதரப்பு ஏற்பாடுகளை மறு ஆய்வு செய்யவும்.

பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்த விஷயத்தை எடுத்துச் செல்லுங்கள். பாகிஸ்தான் சுதந்திர தினம் (ஆகஸ்ட் 14) “துணிச்சலான காஷ்மீரிகளுடன் சுயநிர்ணய உரிமைக்கான அவர்களின் நியாயமான போராட்டத்துடன் கடைபிடிக்கப்படும்” என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15 கருப்பு தினமாக கொண்டாடப்படும் என்றும் அது அறிவித்தது.

இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர் (உள்துறை அமைச்சருக்கு சமமானவர்), கல்வி அமைச்சர், மனித உரிமை அமைச்சர், சட்ட அமைச்சர், ஐ.எஸ்.ஐ மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தியா ஒரு இனவெறி ஆட்சியை நடத்துகிறது என்றும் மனித உரிமைகளை மீறுவதாகவும் இம்ரான் கான் குற்றம் சாட்டினார். இதை உலகுக்கு சுட்டிக்காட்ட அனைத்து ராஜதந்திர வழிகளிலும் இனி செயல்படப் போவதாகக் கூறினார்.

imrankan - 2026எல்லையில் “தொடர்ந்து விழிப்புடன் இருக்க” பாகிஸ்தான் ராணுவத்திற்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370 வது பிரிவை இந்திய அரசு திங்களன்று ரத்து செய்தது! ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக மாநிலத்தை பிரிக்க முன்மொழியப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் அடங்கும் என்பதையும் இந்தியா தெளிவு படுத்தியிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories