December 7, 2025, 4:18 AM
24.5 C
Chennai

சுபாஷிதம் : ஸ்பூர்த்தி பதம் – தூதனின் நற்குணங்கள்!

subhashitam
subhashitam

சுபாஷிதம் : ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

14. தூதனின் நற்குணங்கள்!

ஸ்லோகம்:

அனுரக்த: சுசிர்தக்ஷ: ஸ்ம்ருதிமான் தேசகாலவித்|
வபுஷ்மான் வீதபீர்வாக்மீ தூதோ ராஜ்ஞ: ப்ரசஸ்யதே||

ராமாயணம்

பொருள்:

அரசனிடம் கௌரவத்தோடு கூடிய அன்பு கொண்டவன்,  ஊழலற்ற தூய்மையானவன், சாமர்த்தியம் மிக்கவன், அறிவாளி, இடம் பொருள் காலம் அறிந்தவன், பலமான உடல் கொண்டவன், அச்சமற்ற வாக்கு சாதுரியம் மிக்கவன் – நல்ல தூதுவனாக அரசனால் புகழப்படுவான்.

விளக்கம்:

ஒரு அரசனுக்காக,  ஒரு அரசாங்கத்திற்காக வேறொரு அரசாங்கத்திற்கு நியமிக்கப்படும் செய்தியாளரை தூதன் என்பர். தூதர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்று விவரிக்கும் ராமாயண சுலோகம் இது. இந்நாட்களில் ஒரு வியாபார நிறுவனத்தின் பிரதிநிதிக்கு இருக்க வேண்டிய தகுதிகளும் இவையே!

தூதன் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது ராமதூதனான ஸ்ரீஆஞ்சநேயர். மகா வீரனான ஶ்ரீராமனின் தரப்பில் ஒரு மகா சக்கரவர்த்தியான ராவணனோடு பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற தூதன் எவ்வாறு இருக்க வேண்டும்? மேற்குறிப்பிட்ட இயல்புகள் கொண்ட ஹனுமனைப் போல் இருக்க வேண்டும்.

ராமதூதனாகச் சென்று சபையில் ராவணனுக்கு நல்லுபதேசம் செய்த அனுமான் கூறிய கருத்துக்களே இதற்கு உதாரணம். அனுமனின் அறிவுத்திறன் இதில் வெளிப்படுகிறது. நேரடியாகக் கூறுவது, எதிராளியை மிகவும் தாழ்மையாக பார்ப்பது போன்றவை இன்றி, அனுமன் உசிதமாகப் பேசி, சமயோசிதமாக நடந்து கொண்ட விதத்தை இராமாயணத்தின் இந்த கட்டத்தில் காணமுடிகிறது.

ஒரு வியாபார நிறுவனத்தின் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்றாலும் இது போன்ற குணங்கள் இருக்க வேண்டும் என்று அறிந்துகொள்ளலாம். பணியாற்றும் நிறுவனத்தின் மீது மதிப்பு, நேர்மை, வேலையில் திறமை, நிறுவனம் தயாரிக்கும் பொருட்களைக் குறித்த புரிதல், காண்போரைக் கவரும் உருவம், பிறர் கவனத்தை ஈர்க்கும் பேச்சுத்திறன் முதலான இயல்புகளை முக்கியமானவையாகக் கருத வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories