சுபாஷிதம் : ஸ்பூர்த்தி பதம் – தூதனின் நற்குணங்கள்!

subhashitam
subhashitam

சுபாஷிதம் : ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

14. தூதனின் நற்குணங்கள்!

ஸ்லோகம்:

அனுரக்த: சுசிர்தக்ஷ: ஸ்ம்ருதிமான் தேசகாலவித்|
வபுஷ்மான் வீதபீர்வாக்மீ தூதோ ராஜ்ஞ: ப்ரசஸ்யதே||

ராமாயணம்

பொருள்:

அரசனிடம் கௌரவத்தோடு கூடிய அன்பு கொண்டவன்,  ஊழலற்ற தூய்மையானவன், சாமர்த்தியம் மிக்கவன், அறிவாளி, இடம் பொருள் காலம் அறிந்தவன், பலமான உடல் கொண்டவன், அச்சமற்ற வாக்கு சாதுரியம் மிக்கவன் – நல்ல தூதுவனாக அரசனால் புகழப்படுவான்.

விளக்கம்:

ஒரு அரசனுக்காக,  ஒரு அரசாங்கத்திற்காக வேறொரு அரசாங்கத்திற்கு நியமிக்கப்படும் செய்தியாளரை தூதன் என்பர். தூதர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்று விவரிக்கும் ராமாயண சுலோகம் இது. இந்நாட்களில் ஒரு வியாபார நிறுவனத்தின் பிரதிநிதிக்கு இருக்க வேண்டிய தகுதிகளும் இவையே!

தூதன் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது ராமதூதனான ஸ்ரீஆஞ்சநேயர். மகா வீரனான ஶ்ரீராமனின் தரப்பில் ஒரு மகா சக்கரவர்த்தியான ராவணனோடு பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற தூதன் எவ்வாறு இருக்க வேண்டும்? மேற்குறிப்பிட்ட இயல்புகள் கொண்ட ஹனுமனைப் போல் இருக்க வேண்டும்.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

ராமதூதனாகச் சென்று சபையில் ராவணனுக்கு நல்லுபதேசம் செய்த அனுமான் கூறிய கருத்துக்களே இதற்கு உதாரணம். அனுமனின் அறிவுத்திறன் இதில் வெளிப்படுகிறது. நேரடியாகக் கூறுவது, எதிராளியை மிகவும் தாழ்மையாக பார்ப்பது போன்றவை இன்றி, அனுமன் உசிதமாகப் பேசி, சமயோசிதமாக நடந்து கொண்ட விதத்தை இராமாயணத்தின் இந்த கட்டத்தில் காணமுடிகிறது.

ஒரு வியாபார நிறுவனத்தின் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்றாலும் இது போன்ற குணங்கள் இருக்க வேண்டும் என்று அறிந்துகொள்ளலாம். பணியாற்றும் நிறுவனத்தின் மீது மதிப்பு, நேர்மை, வேலையில் திறமை, நிறுவனம் தயாரிக்கும் பொருட்களைக் குறித்த புரிதல், காண்போரைக் கவரும் உருவம், பிறர் கவனத்தை ஈர்க்கும் பேச்சுத்திறன் முதலான இயல்புகளை முக்கியமானவையாகக் கருத வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories